Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/16/2011

ஸ்டாலின் சிறையில் அடைப்பா? பரபரப்புத் திருப்பங்கள்...



கலைஞர் கருணாநிதிக்கு புதவனாகப் பிறந்திருந்தாலும் கறைபடாத கைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் ஸ்டாலின் அவர்கள் என்று மகிழ்ந்திருந்தோம். ஆனால் இப்போது அந்த எண்ணம் பொய்த்துவிடும் போல் இருக்கிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டை மிரட்டி வாங்கினார் என்று ஸ்டாலின் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியையும் இந்த வழக்கில் சேர்த்து கோர்ட்டுக்கு இழுத்திருக்கிறார். அவர் மீதும் அவரின் மகன் மற்றும் உதவியாளர்கள் மீதும் தமிழ் நாடு காவல் துறை வழக்கு பதிந்துள்ளது.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை கடந்த வாரம் இருந்தது. கனிமொழி திகார் சிறையில் இருந்ததை நினைத்து வருத்தத்தில் சிக்கித் தவித்த கருணாநிதி, அவருக்கு ஜாமீன் கிடைத்ததும் ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற செய்தி இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது.

தி.மு.க., உடன்பிறப்புகளை கைது செய்த பொது சிறைக்கு சென்று அவர்களை சந்தித்து தைரியமும் ஆறுதலும் கூறிய துணை முதல்வருக்கே இப்போது சிறைவாசமா என்பதை எண்ணும் போது நமக்கும் கவலையாகவே உள்ளது.

குற்றம் சாட்டிய குமார் மீது நிஜமாகவே தவறிருந்தால் அவர் மீது வழக்கு தொடரலாம். அதை விட்டுவிட்டு முன்னாள் துணை முதல்வர் ஆளும் அ.தி.மு.க. அரசைக் குற்றம் சாட்டுவது சரியாக இல்லை. கரை படாத கைகளுக்கு சொந்தக்காரர் என பெயர் எடுத்த ஸ்டாலின் இந்த வழக்கை வெற்றிகரமாக சந்தித்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். அவர் மீது தவறில்லையெனில்...

18 comments:

  1. இவங்க காமடி தாங்க முடியலய்யா!

    ReplyDelete
  2. தங்கள் கூற்று மிகவும் சரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. கரை படாத கைகளுக்கு சொந்தக்காரரா? நம்பவே முடியல.. ஈழ மக்களின் ரத்தக் கரையும், தமிழக மக்களின் கண்ணீர்க் கரையும் ஒரு சேர இருக்கிறது ஆட்சி புரிந்த அனைத்து கட்சி தலைமைகளின் கையிலும்....

    ReplyDelete
  4. துணை முதல்வருக்கே இப்போது சிறைவாசமா என்பதை எண்ணும் போது நமக்கும் கவலையாகவே உள்ளது....????????

    ஏன்....????

    ReplyDelete
  5. suryajeeva said...
    கரை படாத கைகளுக்கு சொந்தக்காரரா? நம்பவே முடியல.. ஈழ மக்களின் ரத்தக் கரையும், தமிழக மக்களின் கண்ணீர்க் கரையும் ஒரு சேர இருக்கிறது ஆட்சி புரிந்த அனைத்து கட்சி தலைமைகளின் கையிலும்....//

    மிகச்சரியாக சொன்னீர்கள்...!!!

    ReplyDelete
  6. யோவ் வாத்தி, என்னாச்சுய்யா உமக்கு, ஹா ஹா ஹா ஹா கறைபடியாத கைய்யா, உமக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா ஹி ஹி...!!!

    ReplyDelete
  7. ம்ம்.. செலுத்துங்க..

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி கருன்..!!

    ReplyDelete
  9. அண்ணே...நீங்க கடைசி பத்தில எந்த ஸ்டாலின பத்தி சொல்றிங்க?

    ReplyDelete
  10. அப்பவே.கைய கழுவியிருக்கமாட்டகங்களா?

    ReplyDelete
  11. அவர் மீது தவறில்லையெனில்...

    ReplyDelete
  12. Stalin appadi seithu irupparanu doupt ta than irukku.
    TM 9.

    ReplyDelete
  13. கரை படாத கைகளுக்கு சொந்தக்காரரா? நம்பவே முடியல.. ஈழ மக்களின் ரத்தக் கரையும், தமிழக மக்களின் கண்ணீர்க் கரையும் ஒரு சேர இருக்கிறது ஆட்சி புரிந்த அனைத்து கட்சி தலைமைகளின் கையிலும்....""//
    யா...யா..!
    இதுதான் கரக்ட்.

    ReplyDelete
  14. என்னாது!!! கரை படியாத கரங்களா??? எம்.ஜி.ஆர் போன பிறகு இவர் என்ன செய்தாருங்குற வரலாறு உமக்கு தெரியாதா?

    ReplyDelete
  15. கரை படியாத கரங்களா?? என்னவே நீர் எங்களை வைத்து காமடி கீமடி பண்ணலையே

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"