Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/15/2011

இப்படியும் ஒரு தமிழனா?


மழையையும்,
வெயிலையும்,
ஒன்றாகவே பாவிக்கும்
என்வீடு...!


ஏசி பல நூறு
வைத்தாற்போல
இருக்கிறது,
என் வீட்டு முற்றம்...!


இரவு எப்போதும்
அணைவதில்லை,
என் வீட்டில்
விளக்குகள்...!


பல நூறு
ஐந்தறிவு ஜீவிகளுக்கு
ஓய்வறையாகும்
என் வீடு
பல சமையங்களில்...!


இருப்பினும்
வீட்டு விலாசம் கேட்ட
என் பள்ளிக்
காலத் தோழனுக்கு
எப்படிச் சொல்லித் தொலைப்பது
அந்த மரத்தின் விலாசத்தை...!

22 comments:

  1. ஈரோடு வாடி, உன்னை கொலை பண்ணிடறேன் ஹி ஹி

    ReplyDelete
  2. படமும் பதிவின்எடுப்பும் தொடுப்பும் முடிவும்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  3. விலாசம் :
    மரத்தமிழன்
    s/o மரத்தடிசித்தர்
    மரங்காநல்லூர் !

    ReplyDelete
  4. மாப்ள மரத்துக்கு ஏன் விலாசம் சொல்ற உன் வீட்டுக்கு விலாசம் சொல்ல வேண்டியது தானே... ஒருவேளை இது காக்கா பாடுற கவிதையா?

    ReplyDelete
  5. படத்துக்குப் பொருத்தமான அழகிய கவிதை. (கவிஞரான ரமணி சாரே மனம் கவர்ந்த பதிவுன்னு சொல்லிட்டப்புறம் நான் என்ன சொல்றது) வாழ்த்துக்கள் கருன்!

    ReplyDelete
  6. கவிதை நல்லாயிருக்கு கருன்..

    ReplyDelete
  7. கவிதை அழகாக இருக்கு ஆனால் நீங்க என்ன சொல்லவாறீங்க என்றுதான் புரியலை அவ்வ்வ்வ்வ்வ்வ்?

    இன்று உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றேன் நேரம் கிடைத்தால் தொடரவும்

    ReplyDelete
  8. அட நல்லா இருக்குய்யா..ஜூப்பரு!

    ReplyDelete
  9. வீட்டு விலாசம் கேட்ட
    என் பள்ளிக்
    காலத் தோழனுக்கு
    எப்படிச் சொல்லித் தொலைப்பது
    அந்த மரத்தின் விலாசத்தை...!

    ReplyDelete
  10. ஏழ்மையை சொல்லும் அழகிய கவிதை

    ReplyDelete
  11. //இருப்பினும்
    வீட்டு விலாசம் கேட்ட
    என் பள்ளிக்
    காலத் தோழனுக்கு
    எப்படிச் சொல்லித் தொலைப்பது
    அந்த மரத்தின் விலாசத்தை...!//

    அருமையான கவிதை. அருமையான சிந்தனை.

    வாழ்த்துக்கள் சகோ.

    தமிழ்மணம் வாக்கு 8.

    ReplyDelete
  12. அழகான அர்த்தமுள்ள வரிகள் அண்ணே

    ReplyDelete
  13. மரம்தான் அவனுடைய வீடு,வறுமையிலும் கல்வி கற்கின்றான் என பல நிகழ்வுகளை குறிக்கின்றது கவிதை அருமை

    ReplyDelete
  14. கவிதை சூப்பர்... கரு உதைக்கிறது... மரத்துக்கு கீழே வசிப்பவனின் பெயரை சொல்லி விசாரித்தாலே போதும் ஊரே சொல்லி விடும்... என் தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார்... இரவு ஏதாவது மூடிய கடை தான் அவர் வீடு.. பெருச்சாளிகளுடன் தான் வாழ்க்கை... கோயில் குளம் தான் குளியலறை... ஆனால் அவரை பற்றி கேட்டால் பலரும் அவர் இருக்கும் இடத்தை சரியாக சொல்வார்கள்...

    ReplyDelete
  15. என் வீட்டை பார்...என்னை பிடிக்கும்..(பிடிக்கிறதோ இல்லையோ மதிப்பு வரும்..)
    ஏழ்மையின் பதிவிற்கு செல்வந்த வரிகள்...அருமை நண்பரே..

    ReplyDelete
  16. மெல்லிய வரிகள்தான் ...
    அதன் தாக்கம் வலிமை..
    சமூக கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. எலேய் ஈரோடு வாரீயா? சொல்லவே இல்ல?

    ReplyDelete
  18. அட.. இந்தக் கவிதையே உங்கள் விலாசம் சொல்கிறதே..

    ReplyDelete
  19. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"