Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/17/2011

அன்புள்ள அம்மாவுக்கு...






ருக்கலிலே களையெடுக்கப் போன
என்  ஆத்தா
பொழுதுசாய வீடு வரும்...!

த்துணவு  சோறு தின்னுட்டு
சாயங்காலம் நான் வருவேன்...!

ஜார் தெரு டாஸ்மாக் கடையிலே
கடன் வாங்கி சாராயம் குடிச்சிட்டு
இருட்டினதும் தள்ளாடி அப்பன் வரும்...!

கூலிப் பணம் கேட்டு
ஆத்தாவ இழுத்தடிக்கும்
உடம்பு முழுக்க வீக்கம் கொப்பளிக்கும்...!

யந்து சுருண்டு
படுக்க நான் போகையிலே
சட்டியில கேப்பக் கூழ உப்புப்போட்டு,

லபுள்ள ...
கஞ்சி குடிச்சித் தூங்குன்னு
வெரசா கரைக்கும்...!

ளை புடுங்கிக்
கையெல்லாம் கொப்பளமும் காய்ப்பும் ...!

ப்பன்  அடிச்சாலும்
கை கொப்பளம் போட்டாலும்
என்னைத் தொட்டு ஆசையா தடவுறதுல
உன் வலியெல்லாம் பறந்துடுமா?

னக்கு தெரியும் ஆத்தா
வலியெல்லாம்  ஒளிச்சுவச்சு
உம் மனசுல வடுவாக நிக்கிறது...!
Repost.

21 comments:

  1. துறவிகளால் கூட துறக்க முடியாதது தாயன்புதான். உலகில் மிக உன்னதமானது அது.

    ReplyDelete
  2. அம்மா என்றாலே அன்புதான்

    ReplyDelete
  3. நெஞ்சை கனக்க வைத்துவிட்டது உங்கள் கவிதை

    ReplyDelete
  4. // அப்பன் அடிச்சாலும்
    கை கொப்பளம் போட்டாலும்
    என்னைத் தொட்டு ஆசையா தடவுறதுல
    உன் வலியெல்லாம் பறந்துடுமா?//

    மனதை உருக்கும் வரிகள்
    பாராட்டுக்கள்!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. //பயந்து சுருண்டு
    படுக்க நான் போகையிலே
    சட்டியில கேப்பக் கூழ உப்புப்போட்டு,
    ஏலபுள்ள ...
    கஞ்சி குடிச்சித் தூங்குன்னு
    வெரசா கரைக்கும்...!//

    கணக்க வைத்த வரிகள்..

    ReplyDelete
  6. பிரசவ வலியையே தாங்கிக்கொண்டு பிறந்தவுடன் புன்னகைதவளாயிற்றே?

    ReplyDelete
  7. அருமையான,வாழ்க்கையை பிரதிபலிக்கும் கவிதை-வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மனதை கனக்கச்செய்தகவிதை

    ReplyDelete
  9. உள்ளத்தை வருடும் வரிகள்....

    ஒரு ஏழை வீட்டுச்சம்பவங்கள் கவிதை வரிகளில் பளிச்சிடுகிறது...

    இப்படி ஏகப்பட்ட குடும்பங்கள் இந்தியாவில் உள்ளது..

    இந்த நிலை மாறும் வரவேண்டும்...

    ReplyDelete
  10. //அப்பன் அடிச்சாலும்
    கை கொப்பளம் போட்டாலும்
    என்னைத் தொட்டு ஆசையா தடவுறதுல
    உன் வலியெல்லாம் பறந்துடுமா?//

    தாயன்பைச் சொல்லும் வரிகள் மனதில் இறங்கி கனமாக்குகிறது.

    ReplyDelete
  11. வலிகள் என்றுமே வடுக்களாக தான் இருக்கும்... கண்ணாடியின் ஓட்ட வைக்கப் பட்ட விரிசல் போல

    ReplyDelete
  12. மனதைகரைத்த கவிதை,கேப்பைகூழ் கரைக்கையில் மனது சேர்ந்து கரைகிறது.
    கொப்புளங்கள் விழுந்த அம்மாககளின் கைகள் இந்த சமூகத்தில் சாதித்தவை நிறைய,நிறையவே/

    ReplyDelete
  13. கண்ணுல தண்ணி வரவச்சிட்டியேய்யா வாத்தி...!!!

    ReplyDelete
  14. கண்ணுல தண்ணி வரவச்சிட்டியேய்யா வாத்தி...!!!

    ReplyDelete
  15. அப்ப நீங்க சொன்னது நம்ம அம்மாவைப் பத்தி இல்லையா...

    ReplyDelete
  16. தாய்மை எங்கும் ஒன்றுதான். மனதைத் தொட்டது கவிதை. பிரமாதம் ஐயா...

    ReplyDelete
  17. அம்மாவின் அன்பு, அதற்கு நிகரேது இங்கு!

    ReplyDelete
  18. அம்மாவின் அன்புக்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"