Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/30/2011

இதை,இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்..


"ஹர்வீந்தர் சிங்" இந்த பெயரைக் கேட்டால் இன்று இந்தியாவில் உள்ள  ஊழல் அரசியல் வியாதிகள் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் அரசியல்வியாதிகளுக்கு இதுதான் தண்டனை என்று கூறி முக்கிய மத்திய அமைச்சர் சரத் பவாரின் கன்னத்தில், பளீர், பளீர் ன்னு அறை விட்டு இருக்கிறார் இந்த சீக்கிய இளைஞர்.

அடச்சே ... சரத்பவாருக்கு ஒரே ஒரு அறை தான் விழுந்ததா? கன்னங்கள் இரண்டும் வீங்கும் அளவுக்கு இன்னும் நிறைய அறைகள் விழவில்லையே?என மிகவும் கவலைப்பட்டு இருக்கிறார் அன்னா ஹசாரே.

நம் இந்தியத் திருநாட்டின் வழக்கப்படி பிரதமர், பிரணாப் முகர்ஜி போன்ற அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். நாளைக்கு நமக்கும் இதே அறை தான் என்ற பயம் இவர்களுக்கு இப்போதே வந்துவிட்டது என நினைக்கிறேன்.

இந்த ஹர்வீந்தர் சிங் சரத் பவாரை மட்டும் தாக்கவில்லை. இன்னொரு ஊழல் மன்னன் சுக்ராமையும் தாக்கியிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி . இனி ஹர்விந்தர் சிங்கை கைது செய்து "மெண்டல்' என ஒரு முத்திரை குத்தப்போவது வேறு விஷயம்.

இப்போது நம் விவகாரம், "அந்த அறை" சம்பந்தப்பட்டது மட்டும் தான். சிதம்பரத்துக்கு செருப்புமாலை பூஜை நடக்க இருந்தது ஆனால் மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்டார்.

பாவம் இன்னும் எத்தனை தலைவர்களின் கன்னங்களில் இளைஞர்களால் இப்படி "பளார்" என 'அறை' விழப்போகிறதோ!? நம் இந்திய இளைஞர்களுக்கு இப்போது தான் ரோஷம், கோபம் எல்லாம் பொங்கி வர ஆரம்பித்திருக்கிறது என இந்த விஷயத்தில் நம்பலாம்.

இனி கோர்ட் அளிக்கும் தண்டனையிலிருந்து பல சட்ட ஓட்டைகள் மூலம், இந்த ஊழல் மன்னர்கள் தப்பிவிட்டாலும் மக்கள் தரும் தண்டனைகளிருந்து தப்பிக்கவே முடியாது.  உருவாகட்டும் பல ஹர்விந்தர் சிங்குகள்.

வாழ்க ஜனநாயகம்...

24 comments:

  1. மலர்க புது ஜனநாயகம்

    ReplyDelete
  2. அந்த பயம் - இதை இதைத்தானே எதிர்பார்த்தோம்

    ReplyDelete
  3. //உருவாகட்டும் பல ஹர்விந்தர் சிங்குகள்.//

    மாப்ள நாம முதல்ல யார அடிப்போம் சொல்லு...

    ReplyDelete
  4. எல்லா வியாதிகளும் மிரண்டு போய் வெளியில் வருதுங்க

    யாரு அந்த மொத விக்கெட்????

    ReplyDelete
  5. வாழ்க ஜனநாயகம்!

    ReplyDelete
  6. ஜனநாயகத்தில இது எல்லாம் சகஜம்...

    ReplyDelete
  7. உருவாகட்டும் பல ஹர்விந்தர் சிங்குகள்.

    >>>
    அதே அதே. அந்த பொறுப்பு ஆசிரியர்களான உங்க கைகளிலும் இருக்கு என்பத நினைவில் கொள்க சகோதரா

    ReplyDelete
  8. தட்டிக் கேட்பவர்கள் பெருகட்டும்

    ReplyDelete
  9. இந்த டிராமா எதுக்கு நடந்துச்சு அப்படிங்கறது தான் என் கேள்வி?

    ReplyDelete
  10. its correct nanpaa
    வாழ்த்தக்கள்
    அன்புடன்
    யானைக்குட்டி

    ReplyDelete
  11. போட்டானே ஒரு போடு!

    ReplyDelete
  12. வடநாட்டுலதான் எல்லாம் நடக்குது, ஏன் தமிழ்நாட்டுலயும் இதை தொடரலாமே...?!!!

    ReplyDelete
  13. திகாருக்கு தியாகம் செய்து போனாமாதிரி இங்கே கனிமொழிக்கு பில்டப் கொடுத்துட்டு இருக்குற திமுககாரனை என்னவென்று சொல்வது ஆகிர்ர்ர்ர் த்தூ...

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. வாழ்க ஜனநாயகம்

    ReplyDelete
  16. சரத் பவார்: "இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா"

    ReplyDelete
  17. மாப்ள சிபி எந்த பதிவுக்கு எதுக்கு சாமி சரணம்?

    ReplyDelete
  18. MANO நாஞ்சில் மனோ said...
    திகாருக்கு தியாகம் செய்து போனாமாதிரி இங்கே கனிமொழிக்கு பில்டப் கொடுத்துட்டு இருக்குற திமுககாரனை என்னவென்று சொல்வது ஆகிர்ர்ர்ர் த்தூ...// நல்லாத் துப்புங்க..

    ReplyDelete
  19. பாலா said...
    சரத் பவார்: "இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா"// சூப்பர்.

    ReplyDelete
  20. மனசாட்சி said...
    மலர்க புது ஜனநாயகம்// எது இந்த அடி குடுக்குற ஜனநாயகமா?

    ReplyDelete
  21. Alai mathikka vittalum pathaviyai mathikka vendum thane Sago.?
    TM 11.

    ReplyDelete
  22. வணக்கம் பாஸ்,

    ஊழலுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய ஹர்வீந்தர் சிங்கிற்கு சல்யூட் மாப்பு!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"