Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/31/2011

பெண்ணே உன்னை என்ன சொல்லி அழைக்க?



நீ
காற்று...?


இல்லை,
நிலவு?
இல்லையில்லை 
அதுதேய்ந்து வளரும்..?


பூ?


ம்ஹும்!


தென்றல்?
இல்லை,


மயில்?
மேகம்?
அருவி?
அலை?
சிற்பம்?
ஓவியம்?
இல்லவே இல்லை!


இவற்றோடு ஒப்பிட்டால்
ஆணவம் வந்துவிடும்
இவைகளுக்கு!


உன்னை 
என் கவிதை என்பேன்!
என் கவிதையாவது 
ஆணவப் படட்டும்..!





24 comments:

  1. அழகான கவிதை
    அருமையான பாடல்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. அடேங்கப்பா அடேங்கப்பா

    //என் கவிதையாவது
    ஆணவப் படட்டும்..!//

    அருமை

    ReplyDelete
  3. Kavithai arumai sago. Unnavalai pen enre azhaiyungal. Pennuku pennai thavira veredhum eedagadhu

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  5. கவிதா கவிதா...ச்சே கவிதை கவிதை நல்லா இருக்கு...நடத்துய்யா வாத்தி!

    ReplyDelete
  6. சிந்தனை சிறப்புங்க .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய காலை வணக்கம் பாஸ்,
    தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் எப்படி?’
    அவளை வர்ணிக்க வார்த்தைகள் தேடி, இறுதியில் அவளைக் கவிதையாக எண்ணும் நாயகனின் உள்ளத்து உணர்வுகளைக் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

    டாக்குட்டரின் நிலாவே வா நீ காற்று நான் மரம் பாடல், கவிதைக்கு இன்னும் பலம் சேர்க்கிறது.

    ReplyDelete
  8. கவிதை அழகாய் அடடே ஆச்சரிய குறி

    ReplyDelete
  9. //
    உன்னை
    என் கவிதை என்பேன்!
    என் கவிதையாவது
    ஆணவப் படட்டும்..!
    //

    கலக்கல்

    ReplyDelete
  10. அருமையான கவிதை

    ReplyDelete
  11. ம்ம்ம்...கலக்குறீங்க பாஸ்!

    ReplyDelete
  12. கவிதையின் ஆணவம் சூப்பர் வாத்தி...!!!!

    ReplyDelete
  13. இது கொஞ்சம் வித்தியாசமான கவிதை அருமையான சிந்தனை...!!!

    ReplyDelete
  14. கவிதைக்குப் பிறந்தவளா..
    கவிதையை ஈன்றவளா...??

    கவிதைப் பெண் அழகு...!!

    ReplyDelete
  15. த.ம.7
    பெண்ணே ஒரு கவிதைதான்,உங்கள் கவிதை போல் அழகான!

    ReplyDelete
  16. பெண்
    ஒரு கவிதை
    இரசித்து வாசிப்பவன்
    கவிஞன்

    நீங்கள் ஒரு கவிஞன் (:
    தலைவா ம்ம்ம்ம் ....கலக்கீட்டிங்க

    ReplyDelete
  17. உம் கவிதை ஆணவப்படுகிறது...

    ReplyDelete
  18. கவிதை நன்றாக உள்ளது...

    ReplyDelete
  19. அழகு!அற்புதம்!அம்சம்!

    ReplyDelete
  20. அருமை என்று சொன்னால் உங்கள் கவிதைக்கு தலை கணம் வராதே... வராது என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் அருமை

    ReplyDelete
  21. நல்ல கவிதை... பாராட்டுகள்....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"