Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/17/2011

கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி., தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,?


'உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கூட்டணியும் அமைக்காமல், தி.மு.க., தனித்துப் போட்டியிடும்' என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் புருவ உயர்த்துதலையும், புதிய சமன்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது.

அதைப்பற்றிய செய்தி ஒன்று நேற்றைய தின மலர் செய்திதாளில் படிக்க நேர்ந்தது அதை நீங்களும் பாருங்கள். தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் இரவு, திடீரென ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், 'உள்ளாட்சித் தேர்தல்களில், அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை, ஆழ்ந்த சிந்தனைக்குப் பின், தி.மு.க., முடிவாக எடுத்துள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வளவு ஆண்டுகளாக இந்த ஆழ்ந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது எனத் தெரியவில்லையே என, அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர்.
தமிழகத்தில் இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், கூட்டணி அமைத்து தான் தி.மு.க., போட்டியிட்டு வந்தது. அவர்களது ஆட்சியில் நடந்த, கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படியே! அப்புறம் எப்படி, இந்தத் தேர்தலுக்கு மட்டும் இத்தகைய ஞானோதயம் வந்தது எனத் தெரியவில்லை.
'ஏன் அரசியல் கூட்டணியை உருவாக்கக் கூடாது' என்ற கேள்விக்கும், அவரே பதில் சொல்கிறார். 'உள்ளாட்சித் தேர்தல்களில், அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்கப்படாமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் போன்ற பொதுப் பணிகளே குறிக்கோளாக இருக்க வேண்டும்' என்கிறார் அவர். 

அப்படியானால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கொள்கையோ, கோட்பாடோ கிடையாதா அல்லது இருக்கக் கூடாதா? இவர்கள் கூட்டணி அமைத்து, போட்டியிட்டு உருவாகும் லோக்சபாவிலும், சட்டசபையிலும் கூட, சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பணிகளைத் தானே மேற்கொள்கின்றனர்!


லோக்சபா என்பது பெரிய அமைப்பு; அதை விடச் சிறியது சட்டசபை; அவற்றை விடச் சிறியவை உள்ளாட்சி மன்றங்கள். டில்லியில் உருவாக்கப்படும் சட்டங்களும், திட்டங்களும், கடைக்கோடி மனிதனையும் சென்றடைய வேண்டும் என்பதற்குத் தானே இத்தனை வரையறைகளும், வகைப்பாடுகளும். அப்புறம், அதிலென்ன கொள்கை, இதில் ஏன் தேவையில்லை? அதுவும் தவிர, 'எதற்கெடுத்தாலும், பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டித் தான் முடிவெடுக்க வேண்டும்' எனச் சொல்லும் வழக்கமுடையவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. 'தி.மு.க., என்பது ஜனநாயக அமைப்பு; சங்கர மடம் அல்ல' என்பது அவரது கூற்று.

ஆனால், இப்படிப்பட்ட ஒரு கொள்கை முடிவை, எப்படி ஓர் இரவு நேர அறிக்கையில் முடிக்க முடிந்தது? இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைப் போல, ஏதேனும், 'வீடியோ கான்பரன்சிங்'கில் ஆலோசனை நடத்தினாரா? இத்தனைக்கும், தி.மு.க.,வின் முப்பெரும் விழா, நேற்று தான் நடந்தது. அதில், சிறையில் இருப்பவர்கள் போக, அத்தனை முன்னணித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதுவரை கூட இந்த முடிவெடுக்கக் காத்திருக்கவில்லை.

தி.மு.க.,வின் இந்த விரக்தி முடிவுக்கு, கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல் நிலைப்பாடே காரணம் என்பது, அனைவருக்கும் தெரியும்.. கடந்த சட்டசபைத் தேர்தலில், அக்கூட்டணியில், காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில குட்டிக் கட்சிகள் இருந்தன.

'உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்' என, ஏற்கனவே இளங்கோவனும், இளைஞரணித் தலைவர் யுவராஜாவும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். இளங்கோவன், ஒரு படி மேலேயே சென்று விமர்சித்து வருகிறார். வாசனும், சிதம்பரமும் வாய் திறக்காவிட்டாலும், கட்சியில் பெரும்பான்மையோருக்கு அப்படித்தான் எண்ணமிருக்கிருக்கிறது.

மறுபக்கம், 'தி.மு.க., - அ.தி.மு.க.,வோடு இனி எக்காலத்திலும் கூட்டணி இல்லை' என, கடந்த தேர்தல் வரை மாறி மாறி கூட்டணி அமைத்து வந்த பா.ம.க.,  ராமதாஸ் காமெடி பன்னி கொண்டிருக்கிறார்.. 'தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பா.ம.க.,வின் மரியாதைக்குரிய அழைப்பை பரிசீலிப்போம்' என, திருமாவளவனும் கொளுத்திப் போட்டிருக்கிறார். இப்படி கூட்டணிக் கட்சிகள் எல்லாம், ஏற்கனவே தனி ஆவர்த்தனம் வாசிக்கத் துவங்கிவிட்ட நிலையில் தான், 'இனிமேல் சொந்தக் கச்சேரி' என, அறிவித்திருக்கிறது தி.மு.க.,

தி.மு.க.,வின் இந்தத் தனித்துப் போட்டி அறிவிப்பு, அ.தி.மு.க., கூட்டணிக்கு மிகப் பெரிய சாதகம் என்பதில், எந்தச் சந்தேகமும் இல்லை எந் தோன்றுகிறது.

10 comments:

  1. தாத்தா இப்ப தான் நிலைக்கு வந்திருக்கிறார்... என்ன தான் பொது குழு வெல்லாம் கூட்டி பேசினாலும் தாத்தா சொல்றதையோ இல்ல இளைஞர் அணி தாத்தா சொல்வதை தான் கேக்கணும்.. எதுக்கு இவ்வளவு சிரமம்னு கூடாம முடிச்சிகிட்டாங்க போலிருக்கு.. இவங்க காமடி இப்படின்னா, தே.மு. தி.க நிலைமை இன்னும் படு மோசமா இல்ல இருக்கு ... இந்தாள் தேர்தல் பல முனை தாக்குதல் போல இருக்கு..

    ReplyDelete
  2. நல்ல முடிவை தான் எடுத்துள்ளார்.ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் இவர்(திமுக)கட்சியை தான் சேர்ந்தவர்கள்

    இன்று கூடல் பாலாவின் வலையில்

    வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்

    ReplyDelete
  3. தாத்தா பத்தி செய்தி படிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல மகிழ்ச்சி...........தலைவர் காமடிப்பீஸ் ஆகுறதுல ஒரு சந்தோசம்.நன்றி நண்பரே

    ReplyDelete
  4. ஏற்க்கனவே காங்கிரஸ் கூட கூட்டணி வச்சு பட்ட அவஸ்தைய எப்படி மறக்க முடியும்....

    ReplyDelete
  5. இதை அப்பவே செய்து இருக்கலாம்

    ReplyDelete
  6. ஐயோ ஐயோ காமடி பண்ணிறாரே

    ReplyDelete
  7. விவேகமான முடிவு. காங்கிரஸ் என்ற பீடையை இப்போதாவது தலைமுழுகினாரே.தமிழ்நாட்டை விட்டே காங்கிரஸ் பீடையை ஒழித்துக் கட்டவேண்டும். ஸ்பெக்ட்ரம் என்பது அம்மாவை ஆட்சியில் அமர்த்துவதற்காக பார்ப்பன சக்திகள் [ பார்ப்பன அதிகாரிகள், பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பன ஆலோசகர்கள் ETச்,.} நடத்திய சதிச் செயல். தி.மு.க.வின் சோதனைக் காலம் முடிந்து விட்டது.

    ReplyDelete
  8. இறுதிகட்ட தவிப்பில் இருக்கிறது திமுக...

    ReplyDelete
  9. இன்னும் பல காட்சிகள்
    காத்திருக்கு நண்பரே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. உள்ளாட்சி தேர்தல் என்பது பெரும்பாலும் கட்சி பலத்தையும் மீறி சொந்த செல்வாக்கில் ஜெயிப்பதுதான். என்றாலும் மேயர் வேட்ப்பாளருக்கு கட்சியின் பலம் அவசியமே. கருணாநிதி தனித்து போட்டி என அறிவித்தது வரவேற்கத் தக்கதே. காங்கிரஸ்காரனின் டக்கு என்ன என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"