Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/26/2011

"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு?அழகிரி விரக்தி..


திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எஸ்.ஆர்.கோபி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், "அட்டாக்' பாண்டி ஆகியோரை பார்க்க, நேற்று முன்தினம் , திருச்சி மத்திய சிறைக்கு, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி சென்றார்.

சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க, மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், மத்திய அமைச்சர் அழகிரியுடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் மட்டுமே, உள்ளே சென்றனர். 


அட்டாக் பாண்டி, குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளதால், அவரை பார்க்க அனுமதி வழங்காமல், எஸ்.ஆர்.கோபி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரை பார்க்க மட்டுமே, சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. சிறைக்குள் சென்ற மூர்த்தி, சிறிது நேரத்தில் வெளியே வர, அதுவரை வெளியே நின்றிருந்த முன்னாள் அமைச்சர் நேரு, சிறை உள்ளே சென்று அழகிரியுடன் சேர்ந்து கொண்டார். 

அரை மணி நேர சந்திப்புக்கு பின்,  அழகிரியும், மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரியிடம், நிருபர்கள் பேட்டி கேட்க, ""வேட்டியே வேணாம்னுட்டேன்; பேட்டி எதற்கு?'' எனக் கூறி, மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

சிறையிலிருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, சில முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சால்வை, தி.மு.க, கட்சிக்கரை போட்ட, துண்டு, வேஷ்டி ஆகியவை கொடுக்க முயன்றனர். அவற்றை வாங்க அழகிரி மறுத்து விட்டார். அதன்பின்னரே, இந்த வார்த்தையை அவர் கூறினார். ஆகையால், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இந்த கருத்தை மத்திய அமைச்சர் அழகிரி கூறினாரா அல்லது வேறு எதையும் மனதில் வைத்துக் கொண்டு, "பொடி' வைத்து பேசினாரா என, தி.மு.க.,வினர் குழம்பிப் போயினர்.


15 comments:

  1. அவரு வேட்டியை உருவிட்டாங்க போல..

    ReplyDelete
  2. நல்லா கெலப்புரிங்க பீதிய ..
    எதுவா இருந்தாலும் .. நடக்கட்டும் .. பார்ப்போம்

    ReplyDelete
  3. பதிவின் தலைப்பே தூக்கலா இருக்கு பாஸ்.

    ReplyDelete
  4. அடுத்த வாரம் அழகிரி மனைவியும்...வரும் மாதம் அழகிரியும் உள்ளே செல்ல இருப்பாதாய் கேள்விப்பட்டேன்...கருண்..

    ReplyDelete
  5. //வேட்டியே வேண்டாம்னு சொல்லிட்டேன். பேட்டி எதுக்கு???//

    அப்பாவோட ரைமிங்க் தப்பாம பையனும் எவ்வளவு அழகா டைமிங்கா பேசுறார்

    ReplyDelete
  6. ரைட்டு வாத்யாரே

    ReplyDelete
  7. அப்பா மாதிரி இவரும் பேச ஆரம்பிச்சிட்டாரே !!!!!!!!!!

    ReplyDelete
  8. சிறையிலிருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, சில முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சால்வை, தி.மு.க, கட்சிக்கரை போட்ட, துண்டு, வேஷ்டி ஆகியவை கொடுக்க முயன்றனர். அவற்றை வாங்க அழகிரி மறுத்து விட்டார். அதன்பின்னரே, இந்த வார்த்தையை அவர் கூறினார். ஆகையால், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இந்த கருத்தை மத்திய அமைச்சர் அழகிரி கூறினாரா அல்லது வேறு எதையும் மனதில் வைத்துக் கொண்டு, "பொடி' வைத்து பேசினாரா என, தி.மு.க.,வினர் குழம்பிப் போயினர்.

    என்னத்தச் சொல்ல .அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ....
    நன்றி சகோ பகிர்வுக்கு .தமிழ்மணம் 10

    ReplyDelete
  9. நாசமாபோச்சி போங்க, கலைஞர் மாதிரியே குழப்ப ஆரம்பிச்சிட்டார்...!!!

    ReplyDelete
  10. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!!!!!!!!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"