Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/28/2011

ஆந்திராவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கப்படும் பெண்கள் (வீடியோ இணைப்புடன்)



ந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்துக்கு கல்வி கற்கின்றமைக்கு வருகின்ற சூடான், சோமாலியா போன்ற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அப்பாவிப் பாமர ஏழை முஸ்லிம் பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்கின்றமைக்காக தற்காலிகமாக திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்பது அம்பலத்துக்கு வந்து உள்ளது. 


திருமணம் செய்கின்றவர்களின் சக நண்பர்களும் இப்பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கின்றார்கள் என்பது அடுத்த அதிர்ச்சித் தகவல். பெண்களின் பெற்றோருக்கு வெளிநாட்டு மாணவர்கள் 50 ஆயிரம் இந்திய ரூபாய் வரை கொடுப்பார்கள்.



படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்புகின்ற வரை இப்பெண்களை வைத்திருப்பார்கள். பின் அம்போ.... என்று நிர்க்கதியில் விட்டு விட்டு சென்று விடுவார்கள். திருமணத்துக்கு முன்னராகவே வெற்றுத் தாள்களில் பெண்களிடமும், பெண் வீட்டாரிடமும் கையொப்பம் வாங்கி விடுவார்கள். 


இத்தாள்களை பயன்படுத்திப் பின்னர் சட்ட ரீதியாக விவாகரத்துப் பெற முடியும். இத்தற்காலிக திருமணங்களை ஒழுங்கு செய்கின்றமைக்கு தரகர்கள் உள்ளார்கள். அத்துடன் இத்திருமணங்களை நடத்திக் கொடுக்கின்றமைக்கென முஸ்லிம் காஜிகளும் இருக்கின்றார்கள். அண்மைய நாட்களில் குறைந்தது 06 திருமணங்கள் வரை இவ்விதம் நடந்து இருக்கின்றன.


சூடான் நாட்டைச் சேர்ந்த 25 வயது மாணவன் ஒருவர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் 16 வயதுச் சிறுமி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இம்மாணவனின் நண்பர்களும் சிறுமியோடு மாறி மாறி உறவு வைத்துக் கொண்டனர். ஆனால் சிறுமி இவர்களின் பிடியில் இருந்து ஒருவாறு தப்பினார்.


ஹைதரபாத் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். சிறுமி வழங்கிய தகவலை அடுத்து சூடான் மாணவர்கள் இருவர், தரகர்கள், காஜி என்று 06 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத்தில் ஒரு காலத்தில் பெண்கள் சந்தைகளில் வைத்து அராபிய ஷேக்மாருக்கு விற்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி கிங் தமிழ் .

31 comments:

  1. பெண்கள் வாழ்கையில் படும் இன்னல்கள்தான் எத்தனை எத்தனை .....இந்நிலை மாறவேண்டும் .....

    ReplyDelete
  2. வெட்கம் என்று ஒரு வார்த்தையில் முடிகின்ற விடயமில்லை இது.. இப்படி செய்வோர் மீது கடுமையாக இரக்கமில்லாது சட்டம் பாய வேண்டும் இந்தியாவில் சட்டங்களுக்கு பஞ்சமில்லை ஆனால் அதை நடைமுறைப்படுத்துபவர்களில்தான் இருக்கிறது சிக்கல்...!?

    ReplyDelete
  3. இது என்ன கொடுமையா இருக்கு . அறை வாடகைக்கு எடுப்பது போல் மனைவியும் வாடகைக்கா. அதுவும் பெற்றோர் சம்மதத்துடன். ஹும் இவர்களை என்ன செய்ய?

    ReplyDelete
  4. என் சமுதாய பெண்களே உங்களுக்குத் தான் எத்தனை எத்தனை இன்னல்கள்....வேதனையான விஷயம்

    ReplyDelete
  5. கொடுமை சகோ.
    படிக்க வந்தவர்களுக்கு
    __________இடம் கொடுக்கும்
    கொடுமை எங்கே போய் சொல்ல?

    ReplyDelete
  6. இப்படியும் நடக்கிறதா...அதிர்ச்சி

    ReplyDelete
  7. என்னய்யா இது அநியாயமா இருக்கு.

    ReplyDelete
  8. என்ன கொடுமை இது !

    ReplyDelete
  9. பெண்கள் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்படும் இழிநிலை மாறவேண்டும்.

    ReplyDelete
  10. we are indians so we have to control this and kill others.

    ReplyDelete
  11. கொடுமை சார்!

    ReplyDelete
  12. இப்படியெல்லாம் நடக்குதா?

    ReplyDelete
  13. அடங்கொன்னியா இந்த அநியாயம் வேறயா....!!!!!

    ReplyDelete
  14. மகளிர் சுரண்டப்படும் இழிநிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

    ReplyDelete
  15. அடப்பாவிங்களா... இவனுகளுக்கெல்லாம் கட் பண்ணிடனும்....

    ReplyDelete
  16. ரொம்ப கொடுமை

    ReplyDelete
  17. இது போல உள்ள ஆட்களை ......ய வெட்டனும்

    ReplyDelete
  18. வணக்கம் மாப்ளே, என்ன டிக்கடி ட்ரெஸ் சேஞ் பண்ணுறீங்க. இந்தப் பச்சைக்கலர் டெம்பிளேட் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  19. என்ன சொல்வதென்றே தெரியவில்லை, சமூகத்தில் வாழும் இத்தகைய வக்கிர குணம் கொண்டோரைத் தண்டித்து, கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற சம்பவங்கள் நாட்டில் இடம்பெறாது சகோ.

    ReplyDelete
  20. என்ன கொடும சார் இது

    ReplyDelete
  21. பணத்துக்காக இப்படியெல்லாமா? கொடுமை. . .

    ReplyDelete
  22. அரக்கர்கள்.
    அதிலும் இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் காஜியே மிகப்பெரும் கயவன்.

    ReplyDelete
  23. அறிவு கொண்ட மனிதவுயிர்களை
    அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
    நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
    நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே,
    சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச்சுருள்
    தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்

    பாரதியார்

    ReplyDelete
  24. நெஞ்சு பொறுக்குதில்லையே!

    ReplyDelete
  25. இன்று எனது வலைப்பதிவில்


    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  26. varumaien kaaranamaha pengal vilai poohirargal kavalai alikkerathu varumai oliyavendum

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"