Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/07/2011

தயாநிதி மாறன் பதவி விலகினார்...தி.மு.க.வும் ஒப்புதல்?


மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாகசுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளதை அடுத்து எதிர்கட்சிகள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன.


இந்த நிலையில் பிரதமர் வீட்டில் 07.07.2011 அன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் கலந்து கொண்டார்.

பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் பிரதமர் இல்லத்தில் மன்மோகன்சிங்கை சந்தித்து பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்த தயாநிதி மாறன் தனது கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.

அரசியல் வேண்டாம் எனில் ஒரு கவிதை படிக்க வாருங்கள்....

14 comments:

  1. ரொம்பவே ரொஷக்காரருங்க இவரு..

    ReplyDelete
  2. அதிரடிச் செய்தியினை அசத்தலாகப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

    ReplyDelete
  3. ஹலோ துபாயா...பிரதர் கலா இருக்காரா!

    ReplyDelete
  4. மாப்ள அடுத்த ஆப்பு தயாநிதி மாறனுக்கா இவருக்கு எத்தனையாவது நம்பர் சிறை

    ReplyDelete
  5. கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளுனாத்தான் போவாங்க போல.

    ReplyDelete
  6. திகார்ல புது அட்மிஷனா ?

    ReplyDelete
  7. ஒ அரசியலா மன்னிக்க வேணும்
    எனக்கு இதப்பத்தி ஒண்ணுமே
    தெரியாது ஆளவிடுங்க சாமி!........

    ReplyDelete
  8. ஸ்வீட் எடு கொண்டாடு

    ReplyDelete
  9. எதிர்பார்த்ததுதான்

    ReplyDelete
  10. அப்பாடா....ஒரு வழியா முடிஞ்சது

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"