Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/01/2011

பெற்றோர்களே சிந்திப்பீர்...!


மச்சீர் கல்வி, நடைமுறைக்கு வருமா, வராதா என்ற எதிர்பார்ப்பும், விவாதமும் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் - ஏ.பி.எல்., என்ற அட்டை வழிக் கற்பித்தல் முறை, நடைமுறையில் உள்ளது. 

இம்முறை தொடருமா, இல்லை நிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு மாற்றங்களுடன், தரமான முறையில், அதிக பொருட்செலவில் அச்சடித்துக் கொடுக்கப்பட்ட கற்றல் அட்டைகள், மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கின்றன.

ஆந்திராவில், மலைக் கிராம மக்களின் குழந்தைகளுக்காக, செயல்வழிக் கற்றலை, முதன் முதலில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியது. இதை காப்பி அடித்துத் தான், கடந்த  அரசு, மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், படிப்படியாக நடைமுறைப்படுத்தியது."அட்டை வழிக் கற்பித்தல் முறை, ஆசிரியர்களை சுறுசுறுப்பாக வேலை வாங்கும் திட்டம்' என, சிலர் குறிப்பிடுகின்றனர். 

"மாணவர்களையும், ஆசிரியர்களையும் சோம்பேறிகளாக்கி விடும்' என்கிறது இன்னொரு தரப்பு. "பெற்றோர் மத்தியில் இந்த கூத்து எடுபடவில்லை' என, சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளுக்கு கற்றல் அட்டைகள், பாடத்திற்கு ஏணிப்படி அட்டவணைகள் கொடுத்த பின், இன்றைய நிலையில், ஒன்று முதல், நான்காம் வகுப்பு வரை, ஏ.பி.எல்., முறை வேண்டுமா, வேண்டாமா என, ஓர் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால், 95 சதவீதம் ஆசிரியர்கள், இம்முறை வேண்டாம் என்றே ஓட்டளிப்பர்.

மாதம்தோறும், தொடக்கப் பள்ளி மாணவனுக்கு, 100 ரூபாய் உதவித் தொகை, தரமான பாட நூல், தரமான பயிற்சி புத்தகம், தரமான சீருடைகள், மதிய உணவு, தேர்வு முறைகள், மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவன் முன்னேற்ற அறிக்கை, பெற்றோருக்கு வழங்குதல், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக பள்ளிப் பதிவேடுகள் வழங்க வேண்டும்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் ரெக்கார்டு ஷீட், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களில் போலிகள் நுழையா வண்ணம் வழங்க, அரசு நடவடிக்கை, போதுமான கட்டமைப்பு வசதி, தர மேம்பாடு, உபகரணங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க., அரசு, இதை செய்யுமா?

14 comments:

  1. நல்லது.

    ReplyDelete
  2. ஒவ்வொருத்தரும் ஆட்சிக்கு வரும்போது அவர்களுக்கு தோன்றிய மாற்றங்களை எல்லாம் கல்வித்துறையில் செய்து மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது வாடிக்கையாகிவிட்டது. மாணவர்களுக்கு நன்மையைச் செய்யாமல் அவர்கள் சுயவிளம்பரத்துக்காகவும் ஈகோ பிரச்சனையாகவும் கருதியே அனைவரும் காய்நகர்த்துகிறார்கள்.

    இனியாவது எதிர்கால தூண்களாகிய மாணவர்களின் நலன் கருதி செயல்படுவார்களா என்று பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  3. நல்ல கோரிக்கை மாப்ள இந்த அரசு இதை ஏற்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  4. கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருப்போம்...!

    ReplyDelete
  5. அவசியாமான பதிவு ...

    ReplyDelete
  6. சிந்திக்க வேண்டிய விஷயம்தான்!

    ReplyDelete
  7. நல்ல எதிர்பார்ப்பு தான் மாப்பு...செய்வாங்களா?

    ReplyDelete
  8. ஆட்சியாளர்களை நோக்கிப் பெற்றோரின் உள்ளத்துச் சிந்தனைகளை முன் வைத்திருக்கிறீங்க. நிச்சயம் இந்த எதிர்பார்ப்புக்கள் நல்ல முறையில் நிறைவேற வேண்டும்.

    ReplyDelete
  9. தங்களுடைய நியாயமான கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம்..

    இந்த அரசும் ஏற்கும் என நம்புகிறோம்..
    பிரார்த்திக்கிறோம்..

    ReplyDelete
  10. செயல் வழி கற்றல் அவசியமான ஒன்று.தொடரவேண்டும் என்பதே என்னுடைய கருத்து.குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் கற்பித்தல் இருக்கவேண்டும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"