Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/10/2011

நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருந்ததில்லை எனக்குமட்டும்?!


ம்பிக்கைகளின்
நுனியில்
வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது .

சிதிலமடைந்த மனத்தின்
இருண்ட பொந்துகளில்
அலைந்து கொண்டிருக்கின்றன
சில நம்பிக்கைகள்

நாளை அவை
விபரீதக் கனவுகளாகி
ஓரிரவின் அமைதியை
விழுங்கலாம்.

பாழடைந்த கோவில்களின்
மயான மூலைகளில்
வௌவால்களாக தொங்கலாம்.

வேதாளங்கள் தொங்கும்
முருங்க மரங்களின்
வேர்களாகி
மண்ணில் புதையலாம்.

வை சில வேலை
நிஜங்களாகலாம்.

சில வேலை
பொய்களாகலாம்.

ம்பிக்கைகள்
நம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!

30 comments:

  1. நிஜமாவதிலும், பொய்யாவதிலும்தான் இருக்கிறது நம்பிக்கை...

    ReplyDelete
  2. நம்பிக்கையின்றி வாழ்க்கையில்லை!
    நல் வசந்தத்தின் வருகையைக்
    கூறுவதல்லவா குளிர்காலம்?!

    ReplyDelete
  3. நம்பிக்கை நம் இன்னொரு கை!

    ReplyDelete
  4. //நம்பிக்கை நம் இன்னொரு கை! //


    மூன்றாவது கை

    ReplyDelete
  5. நம்பிக்கை ஒளிரட்டும் ....

    ReplyDelete
  6. நம்பிக்கை கூட ஒரு வித போதை தான், அது மட்டும் இல்லைன்னா எந்த ஒரு மனுசனும் நிஜத்த சந்திக்க முடியாம திணறிடுவான்,
    மிக ஆழமான கருத்துக்கள் தரும் வரிகள், உற்று நோக்கினால் மட்டுமே தென்படும் அர்த்தங்கள்.. அருமை கருன்!
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  7. நம்புங்கள் நம்பிக்கையை. நிறைவான கவிதை.

    ReplyDelete
  8. நம்பிக்கைகள் தான் மனிதனின் பலம்
    அருமை

    ReplyDelete
  9. நல்ல படைப்பு
    நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும்
    இடையில் ஊசலாடும் ஒரு மன நிலையை
    மிக அழகாக சித்தரித்திருக்கிறீர்கள்
    ஆனாலும் நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்ளாதவரை
    நம்பிக்கை உதவுவதில்லை என்பது எனது நம்பிக்கை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நம்பிக்கைகளின்
    நுனியில்
    வாழ்க்கை
    தொங்கிக் கொண்டிருக்கிறது .
    நம்பிக்கை வாழட்டும்.

    ReplyDelete
  11. //நம்பிக்கைகளின்
    நுனியில்
    வாழ்க்கை
    தொங்கிக் கொண்டிருக்கிறது//

    நாம் நடப்பது கூட நம் நம்பிக்கையால்தான் சகோதரரே. கண்களால் பார்த்து கால்களால் நடக்கவில்லை. நடந்தால் நின்றால் கீழே விழமாட்டோம் என்ற நம்பிக்கையே நம்மை நடக்கச்செய்கிறது.

    உங்கள் நல்ல நம்பிக்கைகள் நினைவாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. //நம்பிக்கைகள்
    நம்பிக்கைகளாகவே
    இருந்ததில்லை
    எனக்குமட்டும்...!//

    நம்பிக்கைகளுக்கு அர்த்தம் கொடுத்தால் நம்பிக்கைகளாகவே
    நம்பிக்கைகள்
    தொடரும் .

    ReplyDelete
  13. நல்லதொரு கவிதை ..நண்பரே

    ReplyDelete
  14. தமிழ்மணம் 7 நானே தான்

    ReplyDelete
  15. நம்பிக்கைகள்
    நம்பிக்கைகளாகவே
    இருந்ததில்லை
    எனக்குமட்டும்...!

    மனதை கனக்கச்செய்யும் யதார்த்த வரிகள்! அருமை!!

    ReplyDelete
  16. மாப்ளே நீ வாத்தி.........நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்யா!

    ReplyDelete
  17. மாப்ளே நீ வாத்தி.........நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்யா!

    ReplyDelete
  18. பாழடைந்த கோவில்களின்
    மயான மூலைகளில்
    வௌவால்கலாக தொங்கலாம்.//

    ம்...எல்லாக் காட்சிகளும்-
    மனிதர்களின் பார்வைகளை அடிப்படையாகக் கொண்டு வேறுபடும் என்பது போல்,
    நம்பிக்கையும் வேறுபடும் என்பதனை அருமையாக்ச் சொல்லியிருக்கிறீங்க சகோ.

    ReplyDelete
  19. நம்பிக்கை என்பது, மனிதர்களின் மனதினை அடிப்படையாகக் கொண்டு வேறுபடும் என்பதனை உங்கள் கவிதையில் எளிமையான முறையில் சொல்லியிருக்கிறீங்க சகோ.

    ReplyDelete
  20. நம்பிக்கைகள்
    நம்பிக்கைகளாகவே
    இருந்ததில்லை
    எனக்குமட்டும்...!>>>>

    நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்க வேண்டும்.. அப்போ தான் நாம கூட இருக்கும்.

    ReplyDelete
  21. ம்ம் அசத்தல் அசத்தல்..

    ReplyDelete
  22. கவிதை நல்லா இருக்கு கரூன்

    ReplyDelete
  23. கலக்கல்....நறுக்குன்னு நாலு குத்தியாச்சு...

    ReplyDelete
  24. கலக்கல்....நறுக்குன்னு நாலு குத்தியாச்சு...

    ReplyDelete
  25. சிதிலமடைந்த மனத்தின்
    இருண்ட பொந்துகளில்
    அலைந்து கொண்டிருக்கின்றன
    சில நம்பிக்கைகள்
    >>>
    நச் வரிகள் சகோ

    ReplyDelete
  26. இது கவிதை வாரம் போல. //பாழடைந்த கோவில்களின்
    மயான மூலைகளில்
    வௌவால்களாக தொங்கலாம்.//
    நல்லாத்தான் ஜோசிக்குரீன்ன்க பாஸ்.
    ஓட்டுரிமையை நிறைவேற்றியாச்சு.
    கொஞ்சம் நம்ம ஏரியாவுக்கும் வாங்களேன் யாராச்சும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"