Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/06/2011

காதல் செய்கிற நிலையிலா இருக்கிறேன்? சீமான் ஆவேசம்


இயக்குனர் சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மட்டும் இல்லாது சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை விஜயலட்சுமி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோச‌டி, கற்பழிப்பு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வலசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சீமானின் அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக இந்த சதியை நடத்துகிறார்கள் என்றும் உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது என்றும் சீமான் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது குறித்து சீமான் நேரில் விளக்கம் அளித்தால் தெளிவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இதனை அடுத்து ஒரு பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்திருக்கும் சீமான், காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கிறேன்? ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்கு போராடவும் ஈழப் படுகொலைகளை செய்தவர்களுக்கு எதிராக பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை.

படிக்கவும் தூங்கவும் நேரம் இல்லாத எனக்கு கண்டவர்களோடு டூயட் பாடுவது தான் வேலையா? ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்தக் களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்... என்று சீறுகிறார் சீமான்.

16 comments:

  1. படிக்கவும் தூங்கவும் நேரம் இல்லாத எனக்கு கண்டவர்களோடு டூயட் பாடுவது தான் வேலையா?

    நியாயமான கேள்விதான்

    ReplyDelete
  2. அதானே .அவருக்கு காதலிக்க நேரம் ஏது .காதலிக்க நேரமில்லைன்னு ஒரு படம் எடுக்கலாமுன்னு பாத்தா அதுக்கும் நேரமில்லை .......

    ReplyDelete
  3. சீமானின் மனநிலையில் காதல் வருவது கொஞ்சம் சந்தேகம் தான்...

    ReplyDelete
  4. என்ன கொடும சார் இது!

    ReplyDelete
  5. சீமான் நிலை தர்மசங்கடம்தான்

    ReplyDelete
  6. விஜயலட்சுமி ஒரு ஏவல் பிசாசு

    ReplyDelete
  7. இந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை.

    ReplyDelete
  8. //யுத்தக் களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்... என்று சீறுகிறார் சீமான்.//
    இது நியாயம். சீமான் நன்றாக பேசுகிறார், முழங்குகிறார். எம்மை வைத்து அரசியலும் நடத்துகிறார். ஆனால் நாம் நம்பிய எவரும் எமக்காக இருந்ததில்ல. அதனால இனியும் யாரையும் நம்பி எமாரவும் தயாரில்லை.

    Ashwin Win
    பெண் கண்டார் பெண்ணே கண்டார் - அடிச்சுடாதேங்கோ...

    ReplyDelete
  9. // யுத்தக் களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்... என்று சீறுகிறார் சீமான்.//

    நியாயமான வாதம் தான்.... இன்னும் கூட இந்த விவகாரத்தில் எதிர்பார்கிறேன்!!! பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  10. சீமானின் அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக இந்த சதியை நடத்துகிறார்கள் என்றும் உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது என்றும் சீமான் தரப்பில் சொல்லப்படுகிறது.

    இதுதான் உண்மை!

    ReplyDelete
  11. அந்த பத்தினி நடிகைக்கு கற்பழிப்பு கேஸ் போடுறது இது என்ன புதுசா ??
    ம்ம் இன்னும் மூன்று வருசத்தால யார் மேல போடுவாங்களோ

    ReplyDelete
  12. hi hi jhi அந்த மான் எந்தன் சொந்த மான்

    ReplyDelete
  13. இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோச‌டி, கற்பழிப்பு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வலசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.//

    அவ்........ஏன் இதனை விட வழக்குப் பதிவு செய்ய வேறு பிரிவுகள் இல்லையா?
    வெறும் ஆறே ஆறா....
    ஹி...ஹி...
    அப்புறமா இனவாதக் கருத்துக்களைப் பேசினார்,
    வன்முறையைத் தூண்டினார் என்றெல்லாம் வழக்குப் போட்டிருக்கலாமில்லே;-))
    அப்போ அது வேற ட்ராக்,
    இது வேற ட்ராக்.

    ReplyDelete
  14. யுத்தக் களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்... என்று சீறுகிறார் சீமான்.//

    ஹையோ, ஹையோ...

    என்னம்மோ நடக்குதுங்க, ஒன்னுமே புரியமாட்டேங்குது,

    ReplyDelete
  15. //ஒரு நாள்
    உன் தவறி விழுந்த
    நோட்டுப் புத்தகத்தில்
    உன் பெயர் தான்//

    படிக்கும் போதே மனசு அப்படியே வானத்துல ஜிவ்வுன்னு பறக்குது :)

    //அனுபவம் இல்லாத
    அனுபவத்திற்கு
    என் முனகல்களை எல்லாம்
    முடிச்சுப்போட்டு
    எழுதினேன் காகிதத்தில் //

    முதல் காதல், அது தரும் ஒரு விவரிக்க முடியாத சந்தோசம், அதன் விளைவாய் ஒரு கடிதம்..

    அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறேன் :)


    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"