Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/19/2011

வகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்


ந்தச் சிறுவன் அப்போது தமிழ் மீடியதிலிருந்து ஆங்கில மீடியப் பள்ளியில் சேர்ந்தான். அவனுக்கு இப்பள்ளியின் புதிய சூழல் முற்றிலும் புதிதாய் இருந்தது.

ஆங்கில வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. சிறுவனின் பின்புலம் அறிந்த ஆசிரியர் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.

' I ' என்றால் என்ன? ' YOU ' என்றால் என்ன?

சிறுவன் உடனே சொன்னான். 'I' என்றால் நீங்கள் . 'YOU' என்றால் நான்!.

வகுப்பறையில் இருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தார்கள். ஆசிரியர் அவனை கோபமாக பார்த்தார். ஆங்கிலப் பள்ளியில் படித்துக்கொண்டு இது கூட தெரியாமல் இருப்பதா?

முட்டாள் 'I'  என்றால் நான் என்று அர்த்தம். 'YOU' என்றால் நீ என்று அர்த்தம். இது கூட தெரியாமல் இந்தப் பள்ளியில் படித்து என்ன செய்யப் போகிறாய். உன்னால் இந்தப் பள்ளிக்குத்தான் அவமானம் என்றார்.

சிறுவன் அழவில்லை. அவமானமாக உணரவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு ஆசிரியரைப் பார்த்துப் பேசினான்.

ஐயா ஒரு நிமிடம். நான் சொன்னது சரி என்று இப்போதும் கூறுகிறேன்.       'I' என்றால் நான் என்று தானே அர்த்தம். 'I' என்று உங்களைத்தானே காண்பித்துக் கொண்டீர்கள், அதனால் நீங்கள் என்று அதற்கு அர்த்தம் சொன்னேன். 'YOU' என்றால் நீ என்று தானே அர்த்தம். அதை நீங்கள் கேட்டதால் நான் என்று சொன்னேன்.

வகுப்பறை சில நிமிடம் மெளனமாக இருந்தது. பிறகு, ஆரவாரம் தான்.

ஆசிரியர் சொன்னார். உனக்கு தெரியும் நீ தவறாகவே சொல்லியிருக்கிறாய் என்று, ஆனால் நீ பின்வாங்க தயாராகவில்லை. நீ சொன்னதை சரியென்றும் கூறலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் இருப்பதை தெரிந்துக்கொண்டு சரியாகப் பயன்படுதினாய் அல்லவா? அதற்குத்தான் இந்தப் பாராட்டு. தோல்வி என்று உணராமல் அதற்காக தலை குனியாமல் தைரியமாகப் போராடினாய். அதற்குப் பாராட்டுக்கள் .

40 comments:

  1. புத்திசாலி மாணவன்..

    எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்கப்பா...

    ReplyDelete
  2. மாப்ள அப்போ வாத்தியாருன்னா தான் கலாய்க்கப்பட்டதை ஒத்துக்கவே மாட்டாரா டவுட்டு!

    ReplyDelete
  3. புத்திசாலி பிள்ளை... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. என் வலைப்பூ பக்கம் வந்து இணைந்தமைக்கு நன்றி..உங்கள் வலைப்பூவினை பின்தொடர்வதில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  5. வாயுள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும் என்பார்கள்.

    ReplyDelete
  6. ஆகவே.. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அனைவரையும் கலாய்ப்போம்..

    ReplyDelete
  7. எல்லாம் அனுபவமோ?

    ReplyDelete
  8. //உனக்கு தெரியும் நீ தவறாகவே சொல்லியிருக்கிறாய் என்று, ஆனால் நீ பின்வாங்க தயாராகவில்லை. நீ சொன்னதை சரியென்றும் கூறலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் இருப்பதை தெரிந்துக்கொண்டு சரியாகப் பயன்படுதினாய் அல்லவா? அதற்குத்தான் இந்தப் பாராட்டு. தோல்வி என்று உணராமல் அதற்காக தலை குனியாமல் தைரியமாகப் போராடினாய். அதற்குப் பாராட்டுக்கள் .//

    செம கருத்து

    ReplyDelete
  9. எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டி இருக்கு ஹையோ!! ஹையோ !!!

    ReplyDelete
  10. பதிவு போட்டு 72 நிமிடங்கள் கழித்து மெயில் அனுப்பி என்னை அவமானப்படுத்திய கருணுக்கு என் வன்மையான கண்டனங்கள் ஹி ஹி

    ReplyDelete
  11. ஸ்கூல் லைஃப் செம ஜாலிதான்

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு

    ReplyDelete
  13. எனக்கு என்னவோ அந்த வாத்தியார் இவராக இருக்குமோனு லேசா டவுட்டா இருக்கு?????

    ReplyDelete
  14. @விக்கி உலகம்

    வாத்தியாருங்க எந்த காலத்துல பாஸ் அவங்க பண்ண தப்ப ஒத்துகிட்டு இருக்காங்க...
    அவங்க solve பண்ண answer தப்ப இருந்தா கூட அதன் சரின்னு சொல்லுவாங்க.....

    ReplyDelete
  15. யாருங்க அந்த பையன் நீங்க இல்லன்னு தெரியும்

    ஒருவேள நானா?
    உலவு எலவு கொட்டுவதால் மற்ற 3லும் ஓட்டு

    கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_19.html

    ReplyDelete
  16. அவங்க solve பண்ண answer தப்ப இருந்தா கூட அதன் சரின்னு சொல்லுவாங்க..... --- அணைத்து ஆசிரியர்களும் அப்படியல்ல. யாரோ ஒருவர் அப்படியிருக்கலாம். அதனால் அனைவரையும் குறை கூறுவது தவறாகும்.

    ReplyDelete
  17. நீங்கள் ஆசிரியர் என்று நிரூபித்திருக்கிறீர்கள். நன்று. ;-))

    ReplyDelete
  18. தல ஒரு சின்ன change ......
    நீங்க சொன்ன மாதிரி எல்லோரும் அப்படியில்லை....
    80 % இன்னும் நான் சொன்ன மாதிரி தான் இருக்காங்க....
    20 % வேனும்ன அவங்க சொன்னது தப்பா இருந்தா உண்மைய ஒத்துக்கறாங்க.....
    அது என்னவோ தெரியல பசங்கள மட்டும் குறிவச்சு பலிவங்குரதுல அப்படி என்ன தான் சந்தோசமோ அவிங்களுக்கு....
    சத்தியமா உங்கள சொல்லல......

    ReplyDelete
  19. பையன் இப்பவே அரசியலுக்கு தயாராகிட்டான் போல இருக்கே?

    ReplyDelete
  20. ////// சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    பதிவு போட்டு 72 நிமிடங்கள் கழித்து மெயில் அனுப்பி என்னை அவமானப்படுத்திய கருணுக்கு என் வன்மையான கண்டனங்கள் ஹி ஹி /////////

    எனக்கு ரெண்டுமணிநேரம் லேட்டு, (இல்லேன்னாலும் நாங்க லேட்டாத்தான் வருவோம்......... இது என்ன இஸ்கோலா?)

    ReplyDelete
  21. இன்ட்லி ஓட்டு பெட்டியை காணோம்...

    ReplyDelete
  22. போராட்டம்தானே வாழ்க்கை...

    ReplyDelete
  23. யாருயா அந்த வாத்தி தப்பு தப்பா சொல்லி தராரு .

    ReplyDelete
  24. யோவ் வாத்தி இது உங்க கிளாஸ்'ல நடந்தது தானே....?

    ReplyDelete
  25. அந்த புத்திசாலி மாணவர் நீங்கதானே கருண்?

    ReplyDelete
  26. மிக அருமையான கருத்து... சாணியோ சந்தனமோ செயலுக்குப் பின்னான விளைவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டால் ஏற்றம்தான்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  27. புத்திசாலி பையன்.

    ReplyDelete
  28. உங்களது சொந்த அனுபவமோ ...........

    ReplyDelete
  29. வகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்//

    உங்க வகுப்பிலையா இது...

    ஹி...

    ReplyDelete
  30. சிறுவன் உடனே சொன்னான். 'I' என்றால் நீங்கள் . 'YOU' என்றால் நான்!.//

    எப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்க... சிறுவன் கேள்வி கேட்டவரை அடிப்படையாக வைத்துப் பதில் சொல்லியிருக்கிறான்.
    ஹி...ஹி..

    ReplyDelete
  31. நகைச்சுவையில் இறுதியில் உள்ள தத்துவமும் அருமை..

    இது உங்க வகுப்பிலையா நடந்திச்சு..

    ReplyDelete
  32. புத்திசாலிப் பையன். அந்த ஆசிரியர் நீங்களா?

    ReplyDelete
  33. ஒன்னும் புரிய மாட்டேன்குதே.
    அப்போ I ந "வாத்தியார்"
    YOU ந "பையன்" சரிங்களா?

    ReplyDelete
  34. இப்படியும் இருக்குமோ?
    I என்று you சொன்னால் நீ
    I என்று I சொன்னால் நான்
    You என்று You சொன்னால் நான்
    You என்று I சொன்னால் நீ

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"