Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/12/2011

இரவு நேர இம்சைகள்!? ஒரு மரணத்தின் பாதிப்பு.



நான்
தூங்கும்போது
மாலை செய்தித்தாளில்
படித்த செய்தி
நினைவில்
வந்து  இம்சிக்கிறது...!

தெரிந்தவர் மரணம் தான்
பாதிக்குமென்று
யார் சொன்னது?

முன்பின் தெரியாது
அந்த இளைஞனை...!

டிக்கும்போதே
மனதைப் பிசைந்தது
சிதைந்த முகம்
சிதறிய உடல்
நசுங்கிய கைகள்...!

த்தனை மனிதர்களோடு
அந்தக் கைகள் குலுக்கியிருக்கும்
என்று யோசிக்கும்போதே
கண்ணீர் திரண்டது...!

த்தனை நம்பிக்கையோடு
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
எதற்காகவோ அவன் பயணம்?
வேலைக்கான 
நேர்முகத் தேர்வுக்கா?
தன் காதலியை சந்திக்கவா?
அப்பாவின் வியாதிக்கு
மருந்து வாங்கவா?
எதாக இருந்தாலென்ன,
பாதியில் முடிந்துவிட்டதே
அவன் பயணம்...

னி எத்தனை
கைகள் நீண்டாலும்
அவன் அம்மாவின்
கண்ணீரைத்
துடைக்க முடியுமா?

26 comments:

  1. ஏன்யா காலைல இப்படி அழுவாச்சி கவித........மாப்ள இருந்தாலும் இது வலி நிறைந்த அந்த குடுபத்துக்கு சமர்ப்பிப்போமாக..........

    ReplyDelete
  2. Nalla Vasanam sorry Kavithai eazhuthurika karun. . .

    ReplyDelete
  3. கருண் காலைலயே கவிதை.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. May 13 um eppati than azhuthu kavithai poda poreka

    ReplyDelete
  5. ரசித்த மலைக்க வைத்த கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. ஒரு இளைஞனின் கண்ணீர் க(வி)தை.

    ReplyDelete
  7. மலர்ந்தும் மலராத அந்த பாதி மலருக்கு எனது அஞ்சலி

    ReplyDelete
  8. தெரிந்தவர் மரணம் தான்
    பாதிக்குமென்று
    யார் சொன்னது?


    .....சரியான கேள்வியும் கருத்தும்.

    ReplyDelete
  9. உணர்ச்சிப் பிரவாகமாய் ஒரு கவிதை!
    நன்று,கருன்!

    ReplyDelete
  10. நல்ல கவிதை... உணர்ச்சிகரமான வரிகள்

    ReplyDelete
  11. //எத்தனை நம்பிக்கையோடு
    ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
    எதற்காகவோ அவன் பயணம்?
    வேலைக்கான
    நேர்முகத் தேர்வுக்கா?
    தன் காதலியை சந்திக்கவா?
    அப்பாவின் வியாதிக்கு
    மருந்து வாங்கவா?
    எதாக இருந்தாலென்ன,
    பாதியில் முடிந்துவிட்டதே
    அவன் பயணம்...//

    உண்மைதான்!!! விபத்தில் உயிர் விடுபவனின் சொந்தங்களின் நிலை கடினம்தான்

    ReplyDelete
  12. நல்லாருக்கு கருன்..

    ReplyDelete
  13. //எத்தனை மனிதர்களோடு
    அந்தக் கைகள் குலுக்கியிருக்கும்
    என்று யோசிக்கும்போதே
    கண்ணீர் திரண்டது...!//

    ஐயோ.....

    ReplyDelete
  14. ஒன்னுமே எழுத தோணவில்லை, மனசுக்கு பாரமாக இருக்கு....

    ReplyDelete
  15. கவிதை சூப்பர் வலை பதிவின் டோனி என்ற பட்டத்த உங்களுக்கு சுட்டுகிறேன்

    ReplyDelete
  16. பெயரில்லா சொன்னது…

    கவிதை சூப்பர் வலை பதிவின் டோனி என்ற பட்டத்த உங்களுக்கு சுட்டுகிறேன்
    -இதுல உள்குத்து ஏதும் இருக்கா?

    ReplyDelete
  17. இல்ல அண்ணை உள் குத்து ஒன்றுமே இல்ல உங்க பதிவு நான் நெடுநாள வாசிக்கிறனான் அதனால் தான் சொன்னான் வாழ்த்துக்கள் நல்ல இருக்கு உங்க பதிவுகள் எல்லாமே சூப்பர்

    ReplyDelete
  18. ரொம்ப அருமையான கவிதை கருன், அப்படியே உணரமுடிகிறது!

    ReplyDelete
  19. அன்பின் கருண் - அருமை அருமை - கவிதை அருமை.நம்முடைய முடிவு நம் கையில் இல்லை. அதிலும் விபத்தினால் ஏற்படும் மரணங்கள் - துயரம் தாளாது. பரிதாபப் படுவதை விட வேறொண்றும் செய்ய இயலாது கருண். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. கவிதை மனதை பாதித்தது..!

    உங்களுக்கு ஒரு கோடி வாழ்த்துக்கள் கருண்.. !

    ReplyDelete
  21. உணர்வுகளை சுமந்த வரிகள்

    ReplyDelete
  22. வார்த்தைகளின் தொடுப்பு காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது . வலிகள் அதிகம்

    ReplyDelete
  23. உணர்வுகளின் வெளிப்பாடு.வலிகள் வார்தைகளில் வந்து, மனதை வருத்தியது,கருன்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"