Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/12/2011

தேர்தல் தான் யுத்தம் -சண்டையிடத் தாயாரா?


முற்காலங்களில், தமிழக மன்னர்களுக்கிடையே அடிக்கடி யுத்தங்கள் நடக்கும். புலவர்கள் தலையிட்டு, சமாதானம் செய்து வைப்பர். இப்போது, யுத்தம் செய்வது, தமிழர்களுக்கு மறந்துவிட்டது.

தை புறநானூறு போன்ற இலக்கியங்களில் மட்டுமே படித்து, அனுபவிக்க முடியும். இன்றைய காலகட்டத்தில், தேர்தல் தான் யுத்தம். யுத்தத்திற்கு எப்படி இரண்டு அணிகள் தேவையோ, அதுபோல, தேர்தலுக்கும் இரண்டு அணிகள் தேவை. 

காபாரத யுத்தத்தின் போது, ஒரு சேர மன்னன், இரண்டு பக்கத்து படைகளுக்கும் சோறாக்கிப் போட்டானாம். அவன் தான், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன். அந்த மரபு மட்டும் இன்னும் தொடர்கிறது. தேர்தல் சமயத்தில், தி.மு.க.,வினர் கறி விருந்து படைத்து, பழங்கால தமிழ் மரபை இன்னமும் காப்பாற்றி வருகின்றனர். 

கூடவே, செலவுக்கு நோட்டும் கொடுக்கின்றனர். இது இந்தக் காலத்து யுத்த முறை. ஓட்டுப் போடும் மக்கள் தான் போர் வீரர்கள்; வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்கள். ஒரு ரூபாய் அரிசி, புல்லின் மேல் நிற்கும் பனித்துளி மாதிரி; ஸ்பெக்ட்ரம், பசிபிக் சமுத்திரம் மாதிரி. நாட்டுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தனித்தனியாக பிரித்துக் கொடுத்தால் கூட, ஆளுக்கு மூன்று லட்சம் வரை கிடைக்குமாம். வாக்காளர்களே யோசியுங்கள்...
Thanks Dinamalar.

                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3 . முடிவெடுக்கக் கற்கலாமா?
                                               4. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  

                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....     

28 comments:

  1. தேர்தல் வரை பதிவுக்கு பஞ்சமில்லை..

    ReplyDelete
  2. ///மகாபாரத யுத்தத்தின் போது, ஒரு சேர மன்னன், இரண்டு பக்கத்து படைகளுக்கும் சோறாக்கிப் போட்டானாம். அவன் தான், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன். ///

    மட்டனா? சிக்கனா? இல்லை சாம்பாரா?

    ReplyDelete
  3. இதை புறநானூறு போன்ற இலக்கியங்களில் மட்டுமே படித்து, அனுபவிக்க முடியும்//

    வணக்கம் சகோதரம், எப்படி நலமா? புறநானுற்று நூல்கள் சங்க இலக்கியப் போரினை அல்லது சங்க காலத்தில் இடம் பெற்ற போரினை மட்டுமே பாடி நிற்கின்றன. பிற்காலத்தில் இடம் பெற்ற பெற்ற போர்களினை பரணி, உலா, கலம்பகம் முதலிய இலக்கியங்கள் பாடி நின்றன. பரணி ஆயிரம் யானைகளை வென்ற அல்லது ஆயிரம் யானைகளின் வீரத்திற்கு நிகரான மன்னனினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடுவதாகும். முற் காலங்களில் என்பதை சங்க காலத்தில் என்று போட்டிருந்தால் இன்னும் நிறையப் பொருள் புலப்படும் என எண்ணுகிறேன்.

    உங்களின் சமூகத்திற்கு வேண்டிய, நீங்கள் பத்திரிகையின் வாயிலாக பகிர்ந்துள்ள இவ் ஆக்கம் விழிப்புணர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு சின்ன விடயம், முற் காலத்தில் மன்னர்களின் அரச அபைகளில் புரவலர்கள்/ புலவர்கள் இருப்பது போல இக் காலத்திலும் ஒரு காலத்தில் வைரமுத்துவும்,இப்ப பா.விஜயும் தி.மு.க அரசியல் அபைகளின் பின் புலத்தில் இருக்கிறார்கள் என்பது நிஜம் தானே?

    ReplyDelete
  4. அரசியல் சண்டையா..
    இந்தப்பக்கம் தெரியாம வந்துட்டேன்..

    ReplyDelete
  5. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    தேர்தல் வரை பதிவுக்கு பஞ்சமில்லை..
    --- ஆமா ..ஆமா...

    ReplyDelete
  6. தமிழ் 007 சொன்னது…

    ///மகாபாரத யுத்தத்தின் போது --- சி்பி்ஐ வெச்சு கண்டுபிடிக்களாமா?

    ReplyDelete
  7. நிரூபன் சொன்னது…

    இதை புறநானூறு போன்ற இலக்கியங்களில் மட்டுமே படித்து, அனுபவிக்க முடியும்// உங்கள் கருத்துகளுக்கு நன்றி..

    ReplyDelete
  8. பாட்டு ரசிகன் சொன்னது…

    அரசியல் சண்டையா..
    இந்தப்பக்கம் தெரியாம வந்துட்டேன்..
    --- Thanks 4 ur comments..

    ReplyDelete
  9. படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  10. FOOD சொன்னது…

    படித்தேன், ரசித்தேன்.
    /// Thanks sir..

    ReplyDelete
  11. பதிவுலகில் சணடைன்னா ஆர்வமா கலந்துக்கலாம்.. ஹி ஹி

    ReplyDelete
  12. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    பதிவுலகில் சணடைன்னா ஆர்வமா கலந்துக்கலாம்.. ஹி ஹி
    /// ,..??

    ReplyDelete
  13. ஆளுக்கு 3 லட்சமா

    நம்ம பதிவு
    திருமணத்திற்கு முன் - பின்
    http://speedsays.blogspot.com/2011/03/blog-post_12.html

    ReplyDelete
  14. Speed Master சொன்னது…

    ஆளுக்கு 3 லட்சமா

    நம்ம பதிவு
    திருமணத்திற்கு முன் - பின்
    http://speedsays.blogspot.com/2011/03/blog-post_12.html
    --- உங்க பதிவை பார்த்துவிட்டேன்... Ha..ha..ha..

    ReplyDelete
  15. தேர்தல் பதிவு நல்லா இருக்கு..:)

    ReplyDelete
  16. // இதைத் தனித்தனியாக பிரித்துக் கொடுத்தால் கூட, ஆளுக்கு மூன்று லட்சம் வரை கிடைக்குமாம். வாக்காளர்களே யோசியுங்கள்...//


    நீங்க யோசிக்கச்சொல்வது, பங்கு கேட்பதற்காகவா? இல்லை அதற்கு எதிராக போராடவா?

    ReplyDelete
  17. பாரத்... பாரதி... சொன்னது…
    நீங்க யோசிக்கச்சொல்வது, பங்கு கேட்பதற்காகவா? இல்லை அதற்கு எதிராக போராடவா? /////
    அதத்தான் யோசிக்கனும்...
    தினமும் காலையில் போடும் பதிவைப் பார்க்கவும்...உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ...

    ReplyDelete
  18. தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

    தேர்தல் பதிவு நல்லா இருக்கு..:)
    --- Thanks 4 ur comments..

    ReplyDelete
  19. அரசியல் பற்றி பேசமாட்டேன். ஆனால்...

    ReplyDelete
  20. தேர்தலை சரித்திர நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எங்கேயோ போய்ட்டீங்க...

    ReplyDelete
  21. ஓட்டுகூட எளிதாக போட முடிகிறது. ஆனால், கருத்துதான் பதியவே முடியவில்லை. (அரசியல் பதிவு என்பதாலா?_) மீண்டும் மீண்டும் பெயர் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  22. 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தனித்தனியாக பிரித்துக் கொடுத்தால் கூட, ஆளுக்கு மூன்று லட்சம் வரை கிடைக்குமாம். //
    aaaaaaaaaaaaaahhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  23. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

    ReplyDelete
  24. சாகம்பரி சொன்னது…

    அரசியல் பற்றி பேசமாட்டேன். ஆனால்...
    ////என்ன?

    ReplyDelete
  25. பாலா சொன்னது…

    தேர்தலை சரித்திர நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எங்கேயோ போய்ட்டீங்க...
    ...// ok..ok..

    ReplyDelete
  26. வித்யாசமான சிந்தனை, மகாபாரதத்தை உள்ளிழுத்தது அருமை.. நன்றி.

    ReplyDelete
  27. என்னை லட்சாதிபதி ஆக்கிவிட்டிர்களே ஐயா ,நன்றி +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"