Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/24/2011

வெளிநாட்டில் வாழும் தியாக பறவைகள்


வாழ்கையை
வாடகைக் கனவுகளுக்கு விற்று
வெளிநாட்டுக்குச் செல்வோர்
திரும்பி வருகின்றனர்
சில, பல ஆண்டுகளைத் தின்று...!

கிளம்பிச்  சென்ற
நாளிலேயே நின்றுகொண்டு
நாம் மறந்தே போன
அநேக விஷயங்களை
ஞாபகமூட்டி  கேட்கிறார்கள்...!

விட்டது, தொட்டது
எல்லாம் பேசி முடித்து
எப்போது வந்தாலும்
அதே கோப்பையில் தரும்
தேநீரை
முகஞ்சுளித்து குடித்துவிட்டு
விடைபெறுகிறார்கள்
மாறிப் போன
அவர்களின் மொழியைப் பற்றி
கவலைப்படாமல்...!

பார்வையில் படாத
மண்ணில்
அவர்களுக்கு
வாழ்வு எப்படியோ?!

வ்வொரு முறை
வரும்போதும்
நாம் வாழும் வாழ்க்கையை
ஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!

முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!
 
 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    

25 comments:

  1. ஃஃஃஃகிளம்பிச் சென்ற
    நாளிலேயே நின்றுகொண்டு
    நாம் மறந்தே போன
    அநேக விஷயங்களை
    ஞாபகமூட்டி கெட்கிறார்கள்...!ஃஃஃஃ

    ஆமாம் மனிதனின் மனித நேயப் பக்கங்கள்...
    அருமை.. அருமை..

    ReplyDelete
  2. எனக்கு சரியா புரியல! கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லுங்க மாப்ள!

    ReplyDelete
  3. நாம் வாழும் வாழ்க்கையை
    ஒரு கணமாவது
    வெறுக்க வைத்து
    வெளியேறுவது
    அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//

    I am not agree this words.

    ReplyDelete
  4. வந்தேன்..ரசித்தேன்...வெளிநாட்டு வாழ் தமிழனாக வரிகளை என்னால் உணரமுடிகின்றது...

    ReplyDelete
  5. //கிளம்பிச் சென்ற
    நாளிலேயே நின்றுகொண்டு// தூள் வாத்யாரே.

    ReplyDelete
  6. ஒவ்வொரு முறை
    வரும்போதும்
    நாம் வாழும் வாழ்க்கையை
    ஒரு கணமாவது
    வெறுக்க வைத்து
    வெளியேறுவது
    அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//
    சில நிதர்சனங்கள்!

    ReplyDelete
  7. ஒவ்வொரு முறை
    வரும்போதும்
    நாம் வாழும் வாழ்க்கையை
    ஒரு கணமாவது
    வெறுக்க வைத்து
    வெளியேறுவது
    அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!


    ....... எல்லோரும் அப்படி செய்வதில்லை. ஆனாலும் சிலர் செய்வதை மறுப்பதற்கு இல்லை.

    ReplyDelete
  8. நாம் வாழும் வாழ்க்கையை
    ஒரு கணமாவது
    வெறுக்க வைத்து
    வெளியேறுவது
    அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//

    வெறுப்பேற்றி அனுப்புகிறோம்.

    ReplyDelete
  9. அருமை



    இன்னைக்கு நம்ம பதிவு

    சொர்க்கம் கண்டவன்
    http://speedsays.blogspot.com/2011/03/blog-post_24.html

    ReplyDelete
  10. ///விட்டது, தொட்டது
    எல்லாம் பேசி முடித்து
    எப்போது வந்தாலும்
    அதே கோப்பையில் தரும்
    தேநீரை
    முகஞ்சுளித்து குடித்துவிட்டு
    விடைபெறுகிறார்கள்
    மாறிப் போன
    அவர்களின் மொழியைப் பற்றி
    கவலைப்படாமல்...!//// (((

    ReplyDelete
  11. சூப்பர் பாஸ் ..

    ReplyDelete
  12. //அதே கோப்பையில் தரும்
    தேநீரை
    முகஞ்சுளித்து குடித்துவிட்டு
    விடைபெறுகிறார்கள்
    மாறிப் போன
    அவர்களின் மொழியைப் பற்றி
    கவலைப்படாமல்...!//

    நிச்சயமாக யோசிக்கவேண்டிய விடயம்
    ரொம்ப நல்லா இருக்கு பாஸ்

    ReplyDelete
  13. என்னா கருண்.. காலைல ரொம்ப நேரத்துலயே களம் இறங்கீட்டீங்க போல.. இங்கே ஈரோட்ல காலை 9 டூ 1 4 மணி நேரம் கரண்ட் கட்

    ReplyDelete
  14. Quit natural Karun, at least we must permit them to do this. sort of outlet for there depressive mind ( I am sure when they met their family after long time they may suffered pshychologicaly ).

    ReplyDelete
  15. மனதை நெருடும் கவிதை...

    ReplyDelete
  16. நல்ல விஷயம் ,கருன்

    ReplyDelete
  17. நெகிழ்ச்சியா இருக்கு

    ReplyDelete
  18. //நாம் வாழும் வாழ்க்கையை
    ஒரு கணமாவது
    வெறுக்க வைத்து
    வெளியேறுவது
    அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//
    எனக்கு அப்படிப் படவில்லை
    சிலர் இருக்கக் கூடும்

    ReplyDelete
  19. //ஒவ்வொரு முறை
    வரும்போதும்
    நாம் வாழும் வாழ்க்கையை
    ஒரு கணமாவது
    வெறுக்க வைத்து
    வெளியேறுவது
    அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//
    அவர்கள் இழப்பதும் ஏராளம்!அதைப் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையை நாம் வெருக்க வேண்டியதில்லை!

    ReplyDelete
  20. வெறுக்க வைத்து வெளியேறுவதும் வெளியேற்றுவதும் புலம்பெயர்ந்தவர்களாலா அல்லது உறவுகளா அல்லது இந்திய சூழல்களா என்பது பெரும் விவாதத்திற்குரியது:)

    ReplyDelete
  21. //தேநீரை
    முகஞ்சுளித்து குடித்துவிட்டு//

    தேநீர் மட்டுமில்லை பாஸ் சாப்பிடற பொருள் எதையும் எவர்வீட்டிலும்முகஞ்சுளித்து சாப்பிட்டது கிடையாது..!

    இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் இன்னும் சிலர்

    அருமையான கவிதை..!

    ReplyDelete
  22. //ஒவ்வொரு முறை
    வரும்போதும்
    நாம் வாழும் வாழ்க்கையை
    ஒரு கணமாவது
    வெறுக்க வைத்து
    வெளியேறுவது
    அவர்களின் வெற்றியாக இருக்கிறது//

    இதையே திருப்பி எழுதி பாருங்கள்...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"