Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/25/2011

அறிவியலும், சில காதல் கவிதைகளும்...


தெல்லாம்
இந்த உலகத்தில்
உருகும்  சக்தி படைத்தவை?
மெழுகாய்,
உனை நினைக்கும்போது
கரையும்....
என் மனதைத் தவிர...!


நீ...
அறிவியல் பிரிவு

படிக்கிறாய்... தெரிகிறது
அதற்காக,
உனக்கு கிழித்து பார்க்க
என்
இதயமா கிடைத்தது?


பெண்ணே
அன்று  நீ கொடுத்த
சிரிப்பை
இன்று
என் இதயம் மூலம் எடுப்பது
“ ஒவ்வோரு விசைக்கும் சமமான
எதிர்விசை ஒன்றுன்டு”
எனும்
நியூட்டன் விதியா?


ற்றுமுன் அவள்  நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாக கிடக்கிறது வீதி
ஆனால்
பூமி அதிர்ச்சி வந்தது போல
ஏன்  இன்னும் அதிர்கிறது
‌என் இதயம்...!


நீ வரும் நேரம்
தாமதமானால்
பூவா?தலையா?
விளையாட்டு
பூ.. தான் எப்பவும்
விழுகிறது அன்பே..
நீ வந்து கொஞ்சம்
தலைகாட்டு...!

முந்தைய பதிவுகள்: 1. ஒரு மனசாட்சியின் மரணம்
                                              2. இந்திய வெளியுறவுத் துறை
                                              3.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  


30 comments:

  1. மெழுகாய்,
    உனை நினைக்கும்போது
    கரையும்....
    என் மனதைத் தவிர...!


    .....அருமை.

    ReplyDelete
  2. இதெல்லாம் யார நினைச்சு எழுதுனதுங்க.

    உங்க ஆளு சைன்ஸ் குரூப்போ?

    ReplyDelete
  3. //பூ.. தான் எப்பவும்
    விழுகிறது அன்பே..
    நீ வந்து கொஞ்சம்
    தலைகாட்டு...!//


    அழகான வரிகள்...

    ReplyDelete
  4. இதய அதிர்ச்சி மிகவும் அருமை. எல்லா கவிதைகளிலும் காதல் ரசம் சொட்டுகிறது..

    ReplyDelete
  5. காதல்+அறிவியல் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. விளைவு கவிதை.

    ReplyDelete
  6. காதலுக்கு அறிவியல் உதாரணம்... இன்னும் என்னென்னவெல்லாம் உதாரணமா வருமோ?

    இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

    ReplyDelete
  7. அறிவியல் காதல் நல்ல தான் இருக்கு

    கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாத்தான் பாயாலஜிக்கு வேலை

    பாத்துக்குங்க

    ReplyDelete
  8. கிழித்து பார்க்க
    என்
    இதயமா கிடைத்தது?


    இந்த வரிகள் அருமை

    ReplyDelete
  9. நல்லா இருக்கு பாஸ்..
    நல்லா கிளிக்கிராங்கையா இதயத்த!

    ReplyDelete
  10. நல்லா இருக்கு

    ReplyDelete
  11. பாலா சொன்னது…
    இதய அதிர்ச்சி மிகவும் அருமை. எல்லா கவிதைகளிலும் காதல் ரசம் சொட்டுகிறது.......................////////////////

    எனக்கு ஒரு டம்பளர் ரசம் பிடிச்சி குடுங்க ................

    ReplyDelete
  12. கவிதைகள் அருமை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. சற்றுமுன் அவள் நடந்துபோன
    தடயம் எதுவுமின்றி
    அமைதியாக கிடக்கிறது வீதி
    ஆனால்
    பூமி அதிர்ச்சி வந்தது போல
    ஏன் இன்னும் அதிர்கிறது
    ‌என் இதயம்...!////
    அருமை

    ReplyDelete
  14. இந்த டெம்ப்ளெட் நல்லா இருக்கு தல

    ReplyDelete
  15. wow!! wow!!

    கவிதைகள் அனைத்தும் அருமை.. மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
  16. கரைச்சிட்டீங்கப்பூ.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. //பூமி அதிர்ச்சி வந்தது போல
    ஏன் இன்னும் அதிர்கிறது
    ‌என் இதயம்//

    அருமை அருமை வாத்தியாரே...

    ReplyDelete
  18. yes,you are teacher. I agree.good karun

    ReplyDelete
  19. நல்ல வரிகள், அருமையான கவிதை..

    ReplyDelete
  20. அருமையான கவிதைகள் உட்கார்ந்து யோசிப்பாங்களோ?

    ReplyDelete
  21. கவிதைகள் வெகு அருமை..... காதல் வழிந்தோடுகிறது...... வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  22. இதெல்லாம் உங்க மாணவர்களிடம் காட்டாதிங்க....எக்ஸாம் நேரம்! :))

    ReplyDelete
  23. அருமையான கவிதைகள் :)

    ReplyDelete
  24. வைகை சொன்னது…

    இதெல்லாம் உங்க மாணவர்களிடம் காட்டாதிங்க....எக்ஸாம் நேரம்! :))
    ///என்னுடைய மாணவர்களுக்கு என் பிளாக் பற்றி தெரியாது...

    ReplyDelete
  25. //நீ...
    அறிவியல் பிரிவு
    படிக்கிறாய்... தெரிகிறது
    அதற்காக,
    உனக்கு கிழித்து பார்க்க
    என்
    இதயமா கிடைத்தது?//
    நல்லாருக்கு கருன்.

    ReplyDelete
  26. ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. அறிவியல் கலந்த காதல் கவிதைகள். வித்தியாசமான முயற்சி.

    ///நீ...
    அறிவியல் பிரிவு
    படிக்கிறாய்... தெரிகிறது
    அதற்காக,
    உனக்கு கிழித்து பார்க்க
    என்
    இதயமா கிடைத்தது?///

    இந்த கவிதை பிரமாதம்.

    ReplyDelete
  27. நீ...
    அறிவியல் பிரிவு
    படிக்கிறாய்... தெரிகிறது
    அதற்காக,
    உனக்கு கிழித்து பார்க்க
    என்
    இதயமா கிடைத்தது அருமையான கவிதைகள்

    ReplyDelete
  28. >>>நீ...
    அறிவியல் பிரிவு
    படிக்கிறாய்... தெரிகிறது
    அதற்காக,
    உனக்கு கிழித்து பார்க்க
    என்
    இதயமா கிடைத்தது?

    அதானே.. அண்ணனுக்கு பூ போல மனசு

    ReplyDelete
  29. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை காணோம். மீதி 3ம் ஓக்கே

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"