Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/22/2011

பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்


ருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

ணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. 

ள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

னியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது

கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். 

ளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம்.

புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
 
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.( நன்றி  தினமலர் ).

சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும்



 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


முந்தைய பதிவுகள்: 1.சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்டகவிதைகள்                                               2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                              3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..


51 comments:

  1. பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளில் சொல்லி சீருடையை மாற்றலாம்

    ReplyDelete
  2. சீருடை எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கமே அடிபட்டுவிட்டது. நிச்சயம் சீருடை விஷயத்தில் மிக பெரிய மாற்றம் தேவை. நல்ல பதிவு.

    ReplyDelete
  3. வருங்கால சந்ததி நேரடியாகவும் மறைமகமாகவும் பயங்கரமாக நசுக்கப்படுகிறது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

    ReplyDelete
  4. சீருடை பற்றி சிந்திக்க வேண்டியவர்களுக்கு பெட்டி வாங்கவே நேரம் சரியாக இருக்கு...

    ReplyDelete
  5. இந்த மாதரி உடைகளை கான்வென்ட் பள்ளிகளில் தான் பயன் படுத்து கிறார்கள்....சுடிதார் நல்ல சிறந்த உடையாக இருக்கும் அதையே பயன் படுத்தலாம்

    ReplyDelete
  6. உண்மையிலே சீருடையில் மாற்றம் வேண்டும்..நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. அனைவரும் கூட்டான சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டிய விஷயம்

    ReplyDelete
  8. பெற்றோர்கள் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...

    ReplyDelete
  9. சீருடை விஷயத்தில் தகுந்த மாற்றம் வேண்டும்தான்.

    ReplyDelete
  10. பெண்களின் சீருடையில் அதிக கவனம் செலுத்த வேண்டியதின் அவசியத்தை சொல்லும் பதிவு.

    ReplyDelete
  11. உண்மையான விழிப்புணர்வு தேவை இக்கணம் புரிந்து கொள்ளுமா கல்வித்துறை!

    ReplyDelete
  12. அருமையான கருத்துக்களை நயம் பட கூறி இருக்கின்றீர்கள்.கண்டிப்பாக பெற்றோர்களும்,பள்ளி நிரவாகமும் பர்சீலிக்க வேண்டும்.எங்கள் பகுதியில் உள்ள பள்ளியிலும் இதே போன்ற சீருடை நடை முறையில் இருந்தது.இப்பொழுது பெற்றோர் ,பள்ளி நிர்வாகம் கூடி கலந்தாலோசித்து சுடிதார்& துப்பட்டாவை சீருடையாக கொண்டு வந்து பள்ளி&பெற்றோர் இரு தரப்பினரும் இப்பொழுது சற்று நிம்மதியாக இருக்கின்றனர் என்பதே உண்மை.

    ReplyDelete
  13. உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம் ......நல்ல பதிவு ..............

    ReplyDelete
  14. மிக அருமையான தேவையான பதிவு. மிக நல்ல பதிவுகளை
    எழுதிக் கலக்கும் தாங்கள் 'வாழ்க நலமுடன்'.

    ReplyDelete
  15. உங்கள் பிளாக்கை என் தளத்தில் இணைத்துள்ளேன் இனி அடிக்கடி வருவேன்..

    ReplyDelete
  16. அக்கறை நிறைந்த பதிவு

    ReplyDelete
  17. விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு... அப்புறம் உங்கள் பழைய பதிவுகளைப்பற்றி அறிமுகம் செய்வதில் முந்தைய பதிவுகள் என போடவும்

    ReplyDelete
  18. நல்லதொரு அலசல் கருண்

    ReplyDelete
  19. மிகச் சரியாகவே சொல்லி இருக்கீங்க கருன்.. கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  20. சமுக விழிப்புணர்வு தேவை..
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. மிகவும் கவனிக்கப்பட வேண்டிய பதிவு. நன்றி கருன்!

    ReplyDelete
  22. மிக அருமையான, ஒரு சமூக நோக்கோடு, பயன்பாடு மிக்க பதிவு.. பாராட்டுக்கள்.. கருன்.. தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  23. நல்ல அதேநெரம் தேவையான பதிவு. சீருடை கொண்டுவரப்பட்ட நோக்கமே இப்போது அழிந்துபோய்விட்டது என்பதே உண்மை.

    ReplyDelete
  24. நண்பர் கருன் அவர்களுக்கு

    நல்ல விழிப்புணர்வு பதிவு

    இதுபோன்ற சமூக சிந்தனையுள்ள பதிவுகளை தொடர்ந்து இடுங்கள்

    உங்களுக்கு ஓட்டு போட்டுயிருக்கிறேன்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  25. எதிரான பாலியல் குற்றங்கள் செய்யும் அயோக்கியங்களுக்கு எப்படியுங்கோ சீருடை தூண்டுதலாக அமையும்? பாலியல் குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சீருடையில் மாற்றம் கொண்டுவருவது என்பது மத அடிப்படைவாதிகளை மகிழ்விக்கும் செயல் மட்டுமே.

    ReplyDelete
  26. புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
    பாராட்டுக்கள்கருன்.. தொடருங்கள்.

    ReplyDelete
  27. சிந்திக்கத் தூண்டும் பதிவு!

    ReplyDelete
  28. அருமையான விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  29. சம்பந்த பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.....
    அருமையான அலசல் இந்த பதிவு....

    ReplyDelete
  30. நிச்சயம் இந்த விடயத்தில் பெற்றோர்கள்; பாடசாலைகளுடன் சேர்ந்து விரைவில் நல்ல முடிவு எடுக்கவேண்டும்.
    நல்ல பதிவு

    ReplyDelete
  31. சிந்திக்க வைக்கும் கருத்துக்கள், கண்டிப்பாக ஒரு விவாதம் தேவை, அரசே மாநில அளவில் முடிவெடுக்க வேண்டும்...!

    ReplyDelete
  32. சீருடை கொண்டுவரப்பட்ட நோக்கமே இப்போது அழிந்துவிட்டால் சீருடை விடயத்தில் மாற்றம் வேண்டாம்; சீருடையையே அழித்துவிட வேண்டியதுதானே.
    ok yes

    ReplyDelete
  33. chudidhar is a good choice for Uniform dress for girls from 8th std. onwards. Chudidhar with proper Duppatta is convenent and ideal young school girls.

    ReplyDelete
  34. நல்ல விழிப்புணர்வு கட்டுரை சகோதரா..

    ReplyDelete
  35. உங்களின் பதிவு
    நிச்சயம்
    கவனிக்கப்படவேண்டிய ஒன்று...

    சம்பந்தபட்டவர்கள்
    கவனிப்பார்களா.

    பெண் குழந்தைகளுக்கான
    அமைப்புகள்
    முன்நின்று
    சம்பந்த பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.

    ReplyDelete
  36. it is monitered by parents

    ReplyDelete
  37. உங்களின் பதிவு
    நிச்சயம்
    கவனிக்கப்படவேண்டிய ஒன்று...

    சம்பந்தபட்டவர்கள்
    கவனிப்பார்களா.

    பெண் குழந்தைகளுக்கான
    அமைப்புகள்
    முன்நின்று
    சம்பந்த பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்

    ReplyDelete
  38. good concept, but I am unable to accept that because of these uniforms these tragedies are happening... Provocation of a person is because of the sexy look of the student wearing unsized uniforms. They can stitch it covering down the knee & loose top shirts so that even while carrying back bags, one cannot be induced... Better from 8th standard onwards, it should be made mandatory to insist the girls to wear chudidhars .... Right...?

    ReplyDelete
  39. சமூக அக்கறையோடு எழுதப்பட்ட உங்கள் பதிவு பரிசீலனைக்கு உரியது.சம்பந்தபட்டவர் கவனிப்பார்களா?

    ReplyDelete
  40. .சுடிதார் நல்ல சிறந்த உடையாக இருக்கும் அதையே பயன் படுத்தலாம்
    சம்பந்த பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்

    ReplyDelete
  41. உங்கள் கருத்து மிக மிக சரி. அனைத்து பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து இந்த சீருடை மாற்ற்த்தை பற்றி பள்ளி நிர்வாகத்திடம் பேசி நடைமுறை படுத்த வேண்டும். கூடவே, நம்ம சீதோஷ்ண நிலைக்கு கொஞ்சமும் ஒத்து வராத, Shoe and Tie இதையும் தவிர்க்க வேண்டும்.

    ReplyDelete
  42. நாங்கள்(ஆசிய நாட்டவர்கள்)Show காட்டும் Shoe and Tie விடயங்களில் கைவைத்து விட்டீர்களே!

    ReplyDelete
  43. இலங்கையிலும் மாணவிகளுக்கு சீருடையில் மாற்றம் நிட்சயம் கொண்டுவர வேண்டும்.

    ReplyDelete
  44. சீருடை எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கமே அடிபட்டுவிட்டது. நிச்சயம் சீருடை விஷயத்தில் மிக பெரிய மாற்றம் தேவை.

    ReplyDelete
  45. சீருடை மாற்றி வேருடை பூன, வலியுருத்தியமைக்கு நன்றி...
    கவனிக்கபட வேண்டிய பதிவு
    rajeshnedveera

    ReplyDelete
  46. superb post. but seikiram implement panna romba happy ah iruku...



    Life is beautiful, the way it is...

    ReplyDelete
  47. We must not be a parents to hike this problem, we give our hands to solve this Please support for this.

    Thanks for this blog to show the invisible problems that are our children facing everyday.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"