Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/24/2011

அட.. சீ... மானங்கெட்டவனே..


ஜன் பத்து  ரூபாய்
கூவி கூவி  அழைத்தான்
தள்ளுவண்டிக்காரன்....!


ழு ரூபாய் வீதம்
இரண்டு டஜன் கொடு
பேரம்பேசினேன் அவனிடம்....!


ரை மணிநேரம்
வாதாடினேன் - இறுதியில் 
இரண்டு டஜன்  பதினைந்து ரூபாய்
என பரிமாறிக்கொள்ளப்பட்டது
பணமும்.... பொருளும்...

பீடியை எடுத்து
இயல்பாகத்தான்  துப்பினான்...
என்றாலும்
எனக்கு  உறுத்திக் கொண்டிருக்கிறது.


திர் கடையில்
குளுகுளு காற்றுவாங்கி
பிரிதிபளிக்கும் கண்ணாடி  கூண்டுக்குள்
திருப்தி இல்லையென்றாலும் 
சொன்ன விலைக்கு நான்
சட்டை வாங்கி வந்ததை
பார்த்திருப்பானோ?

ண்மைதான்
நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...


கவிதை பிடித்திருந்தால்  ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

38 comments:

  1. புரியவில்லை விளக்கவும்

    ReplyDelete
  2. //வாதாடினேன்
    இறுதியில்,//


    //கொடுத்துவிட்டு

    பீடியை எடுத்து
    //

    இவ்விடங்களில் தவறு உள்ளது.. மேலும் சில இடங்களில் குறியீடுகள் இட்டிருந்தால் நல்லாயிருக்குமோ என்று தோன்றியது.. சொற்கள் வன்மையாக பொதிக்கபடுவது போல் உணர்கிறேன்.. இதையெல்லாம் சொல்வதன் காரணம்.. நானும் இதே தவறை செய்பவன் தான்.. திருத்திகொள்ளுங்கள்.. நானும் திருந்த முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  3. நம்ம ஆளுங்களின் குணமே இதுதானே....
    ஆத்துல போறது தெரியாது...

    ReplyDelete
  4. நறுக்குன்னு நாலு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு....

    ReplyDelete
  5. நாட்டு நடப்பு!!!!

    ReplyDelete
  6. அருமையா இருக்குது..
    .இதையும் பாருங்க
    http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_86.html

    ReplyDelete
  7. ஆனா பாருங்க நம்ம சம்சாரங்களுக்கு இந்தமாதிரி உறுத்தலே வர்றதில்லை! காசு நம்மளோடது தானே!

    ReplyDelete
  8. நல்ல கருத்து! நடைபாதை வியாபாரிகளிடம்தானே நமது பேரமெல்லாம்!

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  9. நல்ல கவிதைன்னு சொல்ல வந்தேன்... அப்புறம்தான் கூர்மதியின் பின்னூட்டத்தை பார்த்தேன்... இருப்பினும் சொல்ல வந்த கருத்து நன்று...

    ReplyDelete
  10. வியர்வைசிந்தும் உழைப்பாளிகளிடம் தான் நாம் பேரம் பேசுகிறோம் என்பதை அருமையாக விளக்கிறது .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Speed Master கூறியது...
    வடை ----

    வடை உங்களுக்கே..

    ReplyDelete
  12. Speed Master கூறியது...

    புரியவில்லை விளக்கவும்----

    கவிதை கொஞ்சம் மாற்றியுள்ளேன் , இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. athu கூறியது...

    kavithaiya ? enga irukku ---

    இப்படியெல்லாம் உண்மையை போட்டு உடைக்ககூடாது.

    ReplyDelete
  14. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    vadai...---
    வடை போச்சு

    ReplyDelete
  15. கவிதை சூப்பர், உண்மையிலேயே அருமை

    ReplyDelete
  16. தம்பி கூர்மதியன் கூறியது...

    //வாதாடினேன்
    இறுதியில்,//


    //கொடுத்துவிட்டு

    பீடியை எடுத்து
    //

    இவ்விடங்களில் தவறு உள்ளது.. மேலும் சில இடங்களில் குறியீடுகள் இட்டிருந்தால் நல்லாயிருக்குமோ என்று தோன்றியது.. சொற்கள் வன்மையாக பொதிக்கபடுவது போல் உணர்கிறேன்.. இதையெல்லாம் சொல்வதன் காரணம்.. நானும் இதே தவறை செய்பவன் தான்.. திருத்திகொள்ளுங்கள்.. நானும் திருந்த முயற்சிக்கிறேன்..//////////////////தவறுகள் முடிந்தவரை சரிசெய்துள்ளேன்.

    ReplyDelete
  17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    நம்ம ஆளுங்களின் குணமே இதுதானே....
    ஆத்துல போறது தெரியாது...
    /// thanks anna.

    ReplyDelete
  18. உண்மைதான்
    நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
    விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...

    நிதர்சனம்

    ReplyDelete
  19. சரிதான்.. இளநீர்க்கு பேரம் பேசுகிற நாம்.. பெப்ஸிக்கும் கோக்கிற்கும் பேரம் பேசுவதில்லையே.. அதே மனநிலைதான்

    முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

    ReplyDelete
  20. உண்மைதான்
    நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
    விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...///
    நிதர்சனமான உண்மை நண்பா........
    இதை நான் உணர்ந்து பேரம் பேசுவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகின்றது :)

    ReplyDelete
  21. உண்மைதான்
    நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
    விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...
    உங்கள் கவிதையின் முடிவு...... சுடும் உண்மைகள்...வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  22. வியர்வைகளுடன் விவாதம்... நல்ல ஒரு வார்த்தைப் பிரயோகம் சகோதரா...

    ReplyDelete
  23. நல்ல கருத்தை கவிதையா வடிச்சு இருக்கீங்க...
    ஆனால்,பேரம் பேசுவது அதிகம் பேசுவது ஆணா? அல்லது பெண்ணா? என்ற விஷயத்தை சேர்த்து இருக்கலாம். பேரம் பேசுவதைப்பற்றி கீரை விற்கும் பெண்மணியிடம் கேட்டால் பல பதிவுகள் போடலாம்...

    ReplyDelete
  24. உண்மை தான் தல!

    எளியவர்களிடம் மட்டுமே நாம் வீரத்தை காட்டி கொண்டிருக்கிறோம்!

    நச் வரிகள்!

    ReplyDelete
  25. நல்லா இருக்குது, சட்டமும் சங்கடங்களும் என்றும் ஏழைகளுக்கு மட்டும்தான்

    ReplyDelete
  26. நன்னாருக்கு ....................

    ReplyDelete
  27. //உண்மைதான்
    நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
    விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...//
    நச்!

    ReplyDelete
  28. டைட்டிலைப்பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னைத்தாக்கித்தான் பதிவு போட்டிருக்கீங்களோன்னு.. நல்ல வேளை...

    ReplyDelete
  29. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.தொடர்க உங்கள் கவிதை போர்.

    ReplyDelete
  30. யதார்த்தத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள், கவிதையின் கருப்பொருள் அருமை... அதெல்லாம் சரி பதிவின் டெரர் தலைப்பு யாரைக் குறிக்கிறது?

    ReplyDelete
  31. ரஹீம் கஸாலி சொன்னது…

    உண்மைதான்
    நாம் எப்போதும் வியர்வைகளோடுதான்
    விவாதங்கள் செய்துக்கொண்டிருப்போம்...

    நிதர்சனம்
    /// Thanks for comments.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"