Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/21/2011

அன்புள்ள வாக்காள பெருமக்களே...


ன்புள்ள வாக்காள 
பெருமக்களே...

நான் உங்கள் வேட்பாளர்,
நான் உங்கள் ஊரின் வேட்பாளர்...

நீங்கள் என்னை தோ்ந்தெடுத்தால்,
நான்,
ஜாதிகளை ஒழிப்பேன்,
விண்ணப்பங்களில்,
இருக்கும்,
ஜாதிக்கான இடமே இல்லாமல்,
செய்து விடுவேன்..

ஜாதி கட்சிகளையும்,
ஒழித்துவிடுவேன்....
ஜாதிகளுக்கான,
இடஒதுகீட்டையும்,
அழித்துவிடுவேன்....

னவே....
ஜாதிகள் இல்லாத,
சமுதாயத்தை,
அமைக்க,
எனக்கே ஓட்டு போடுங்கள்.

றக்காதீர்,
மறந்தும்  இருந்துவிடாதீர்...
நான் உங்கள் ஜாதிக்காரன்!!!?
(அந்த போட்டோவிற்கும் கவிதைக்கும் நிச்சயமாக சம்பந்தம் இல்லை, சொன்னா நம்பனும்).

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

37 comments:

  1. அருவருக்க தக்க நிகழ்வு

    ReplyDelete
  2. நம்பிட்டோம், நச்சுன்னு சொல்லிருக்கீங்க...

    ReplyDelete
  3. Speed Master சொன்னது…

    First நீங்கதான் பாஸ்.. நன்றி

    ReplyDelete
  4. இரவு வானம் கூறியது...
    நம்பிட்டோம்-------

    நம்பிட்டீங்கள்ள சந்தோஷம்.. நன்றி.

    ReplyDelete
  5. ஜாதிகளின் பெயரால் ஓட்டு வேட்டையாடுவதையும், பின்னர் மனிதர்களை வேட்டையாடுவதையும் செய்யும் சில அரசியல் தலைகளுக்கு இது சவுக்கடி..

    ReplyDelete
  6. அட..என்ன அருமையா எழுதி கவிதையில் வடித்து இருக்கீங்க!!!

    ReplyDelete
  7. சிறந்த பதிவு நன்றிகள்
    நம்மளுக்கும் வோட்டு போடுங்க

    ReplyDelete
  8. நச்சுனு இருக்கு ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பாரத்... பாரதி... கூறியது...

    ஜாதிகளின் பெயரால் ஓட்டு வேட்டையாடுவதையும், பின்னர் மனிதர்களை வேட்டையாடுவதையும் செய்யும் சில அரசியல் தலைகளுக்கு இது சவுக்கடி../////
    நன்றி..

    ReplyDelete
  10. ஸாதிகா கூறியது...

    அட..என்ன அருமையா எழுதி கவிதையில் வடித்து இருக்கீங்க!!!////
    தங்களது மேலான கருத்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  11. நிதர்சனன் கூறியது...

    சிறந்த பதிவு நன்றிகள்
    நம்மளுக்கும் வோட்டு போடுங்க///
    கன்டிப்பாக..

    ReplyDelete
  12. Ramani கூறியது...

    நச்சுனு இருக்கு /////

    சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன்....

    ReplyDelete
  13. நல்ல சிறப்பான பதிவு
    http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_1502.html
    எஜமானியின் கல்லறையை காவல் காக்கும் நாய்! (பட இணைப்பு)

    ReplyDelete
  14. நல்லாருக்கு நண்பா.....

    ReplyDelete
  15. குறியீடுகள் தவறாக பிரயோகிக்கப்பட்டுள்ளது.. குறியீடுகள் அந்த கவிஞரின் எண்ணத்தை பிரதிபலிக்கும்.. கொஞ்சம் கவனமாக இருங்கள்..

    ReplyDelete
  16. கருத்து..அன்றாடம் நடக்கும் ஒரு சிரிப்பான விசயத்தை பத்தி சொல்லியிருக்கீங்க.. எடுத்துகொண்டு போன விதம் அழகு.. ஆனால் ராமதாஸ் மற்றும் திருமாவின் படம் எதற்காக என்று காரணம் சொல்லும்படி கேட்டுகொள்கிறேன்.. அப்பரம் வரிகள் அமைப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.. ஆனால் கருத்தும், வரியும் சூப்பர்.. முடிவு சவுக்கடி.. இன்னும் நல்லா உங்களால எழுத முடியும்.. என்னடா இவன் சும்மா குறை சொல்றானேன்னு நினைக்க வேணாம்.. தோணுச்சு அவ்வளவு தான்.. நானும் கத்துகுட்டிதான்..

    ReplyDelete
  17. ஜாதி , நமது நாட்டின் சாபக்கேடு !!
    ஜாதியை ஒழிக்க அரசியல்வாதிகளால் முடியாது .
    மக்களின் மனங்களில் என்று ஜாதி ஒழிகிறதோ , அப்போது தான் ஜாதீ ஒழியும்

    ReplyDelete
  18. எனவே....
    ஜாதிகள் இல்லாத,
    சமுதாயத்தை,
    அமைக்க,
    எனக்கே ஓட்டு போடுங்கள்.

    மறக்காதீர்,
    மறந்தும் இருந்துவிடாதீர்...
    நான் உங்கள் ஜாதிக்காரன்!!!?

    நல்லாருக்கு நண்பா..

    ReplyDelete
  19. நிதர்சனன் கூறியது...
    நல்ல சிறப்பான பதிவு///
    நன்றி

    ReplyDelete
  20. நீங்கள் என்னை தோ்ந்தெடுத்தால்,
    நான்,
    ஜாதிகளை ஒழிப்பேன்,
    விண்ணப்பங்களில்,
    இருக்கும்,
    ஜாதிக்கான இடமே இல்லாமல்,
    செய்து விடுவேன்..

    ஹா.... ஹா... அருமை! நண்பா உங்களை மற்றவர்கள் அங்கீகரித்து வாக்குப் போட வேண்டுமானால், நீங்களும் மற்றவர்களுக்கு வாக்குகள் போடா வேண்டும்! தொடக்கம் உங்களில் இருந்தே தொடங்கட்டும்! வாழ்த்துக்கள் நண்பா!!

    ReplyDelete
  21. ரஹீம் கஸாலி கூறியது...
    நல்லாருக்கு நண்பா.....////
    எங்க போயிட்டிங்க சார். திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  22. தம்பி கூர்மதியன் கூறியது...

    குறியீடுகள் தவறாக பிரயோகிக்கப்பட்டுள்ளது.. குறியீடுகள் அந்த கவிஞரின் எண்ணத்தை பிரதிபலிக்கும்.. கொஞ்சம் கவனமாக இருங்கள்..////
    தவறுகள் திருத்தப்படும்.

    ReplyDelete
  23. Vijay @ இணையத் தமிழன் கூறியது...
    ஜாதி , நமது நாட்டின் சாபக்கேடு !!///

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்..

    ReplyDelete
  24. ரேவா கூறியது...

    எனவே....
    ஜாதிகள் இல்லாத,
    சமுதாயத்தை,
    அமைக்க,
    எனக்கே ஓட்டு போடுங்கள்.

    மறக்காதீர்,
    மறந்தும் இருந்துவிடாதீர்...
    நான் உங்கள் ஜாதிக்காரன்!!!?

    நல்லாருக்கு நண்பா..///////

    தங்களது மேலான கருத்துக்கு மிக்க நன்றி ...

    ReplyDelete
  25. அட அட அரசியல் கவிதை...நிதர்சனமான உண்மை

    ReplyDelete
  26. கவிதை நல்லா இருக்குங்க . ஹி ஹி
    அன்றாட நிகழுவுகள் பத்தி சொல்லிட்டீங்க ,
    கூடவே அவர் போட்டோ ஹி ஹி


    (அப்புறம் அந்த போட்டோவுக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நம்பிட்டேன் , ஹி ஹி )

    ReplyDelete
  27. //அலோ..பாஸ்... உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"//

    மொக்கையா இருக்கும் பரவா இல்லைங்களா ?

    ReplyDelete
  28. ஜாதிகளின் பெயரால் ஓட்டுக்கள் வேட்டையாடப்படுவதை உங்கள் கவிதை தெளீவாக எடுத்துச்சொல்கிறது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. ரொம்ப நல்லாயிருக்குங்க! நடக்கிற விசயத்தை காமெடியா சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  30. பின்னுட்டம இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  31. சூப்பரா சொன்னீங்க பாஸ்... ஆனாலும் கடைசியில நம்ம ஆளுங்கலும் காசையும் ஜாதியையும் பார்த்துதானே ஓட்டு போடுறாங்க.....

    ReplyDelete
  32. நல்லாயிருக்கு... மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  33. மறக்காதீர்,
    மறந்தும் இருந்துவிடாதீர்...
    நான் உங்கள் ஜாதிக்காரன்!!!?


    நண்பா உனக்குள் இப்படி ஒரு கவிஞ்சனா?

    ReplyDelete
  34. இது school ல படிச்சது ஆனா யார் எழுதுனதுன்னு நியாபஹம் வர மாட்டேங்குது

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"