Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

12/31/2010

எல்லாரும் ஒண்ணுங்க!

எல்லாரும் ஒண்ணுங்க! 


னால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு வினோதமான புத்தாண்டு பிறக்கப் போகிறது!


ம்... 1.1.11 எனத் தொடங்கும் இந்த ஒண்ணு மயம், இதே ஜனவரியில் மீண்டும் 11.1.11 எனவும், நவம்பரில் 1.11.11 மற்றும் 11.11.11 எனவும், "நம்பர் ஒன்'னாக காட்சியளிக்கிறது. 

ந்த தருணத்தில், மாணவர்கள் படிப்பிலும், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தத்தம் துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மற்ற அரசு சார்ந்த, சாரா நிறுவனங்களில் உள்ளோர் அனைவரும், நாமும், "நம்பர் ஒன்' நிலையை, அந்த இலக்கை நோக்கி பயணிக்க முற்பட வேண்டும். 


சிவப்பு கம்பள வரவேற்பு, எட்ட முடியா சாதனைகளுக்கு சொந்தம் என உங்களை மாற்றிக் கொள்ள, ஆயத்தப்படுத்திக் கொள்ள, உங்களால் முடியும் என, முதல் நாளில் சபதம் மேற்கொள்ளுங்கள். 

ரோக்கியமான போட்டிகளான, கிரிக்கெட், கால்பந்து, மல்யுத்தம் என நீளும் அனைத்து விளையாட்டுகளிலும், "நம்பர் ஒன்' நிலையை மனதளவிலும், அதை செயல்படுத்தவும், முழுமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


 
ந்த ஒன்று என்ற விஷயத்தில், நாம் ஜாதி, மதங்களை மறந்து, எல்லாரும், "இந்தியர்' என்று ஒரு முகமாகி, நதிகளையும் ஒரு முகமாக்கி, இந்தியா, "நம்பர் ஒன்' என்ற சிகரத்தைத் தொட, கைகோர்ப்போம்!



ஞாபகம் வருதே....

ஞாபகம் வருதே - இந்தியா: 2010 

ஜனவரி
4.    ஆந்திராவில் தனித்தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த்.
5.    வட இந்தியாவில் குளிருக்கு 122 பேர் பலி.
6.    சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கட்சி பதவியை  
       ராஜினாமா.
24.    கர்நாடகம்: கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்.
27.    இந்தியர்கள் அனைவருக்கும் மும்பை சொந்தம்: முகேஷ்அம்பானி. 

பிப்ரவரி

8.    காஷ்மீரில் பயிற்சியின்போது பனிப்பாறைகள் சரிந்து 17 ராணுவ வீரர்கள் 
       மரணம்.
8.    முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு- மேற்குவங்க அரசு     முடிவு.
13.    புனே-ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி.
21.    தனித்தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழகத்தில்      
         தீக்குளித்த வாலிபர் மரணம்.
22.    பெட்ரோல்-டீசல்-மண்ணெண்ணெய், கேஸ் விலை கடும் உயர்வு.
25.     பிரபல ஓவியர் எம்.எப். உசேனுக்கு கத்தார் குடியுரிமை வழங்கியது.  

மார்ச்

2.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளா, திரிபுராவில்      
       மோட்டார் வாகன, ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
2.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு 
        மாட்டுவண்டி யில் சென்றார் சந்திரபாபு நாயுடு.
8.    மகளிர் மசோதா தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி.
8.    மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்- லல்லு, முலாயம் அறிவிப்பு.
9.    மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேறியது.
17.    சிஐடியு அகில இந்திய மாநாடு சண்டிகரில் எழுச்சியுடன் துவங்கியது.

ஏப்ரல்

1.    6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி 
       உரிமைச்சட்டம்.
1.    மக்கள் தொகை கணக்கெடுப்பு-ஜனாதிபதி துவக்கி வைத்தார்.
16.    கொச்சி கிரிக்கெட் அணி ஏலம்: சசிதரூர் பதவி விலகக் கோரி அமளி.
17.    பெங்களூர் கிரிக்கெட் மைதானம் அருகே இரண்டு இடங்களில்            
         குண்டுவெடிப்பு.
19.    எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கு     
         அனுமதி மறுப்பு - மக்களவையில் எதிர்க்கட்சிகள் கண்டனம்.
20.     மேகாலயா முதல்வராக முகுல் சங்மா பதவியேற்பு.
22.     அமைச்சர் அழகிரி சபைக்கு வராதது ஏன்?- நாடாளுமன்றத்தில்  அமளி.
24.     பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு.
27.     விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய அரசை கண்டித்து     
          இடதுசாரிக்     கட்சிகள் உட்பட 13 கட்சிகள் நாடு தழுவிய பொது       
          வேலைநிறுத்தம்.
27.     விலை உயர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்   
            வெட்டுத்தீர்மானம் - ஆதரவு 201, எதிர்ப்பு 289. 

மே

2.    பாலியல் குற்றச்சாட்டு: கர்நாடக பாஜக அமைச்சர் ஹாலப்பா  ராஜினாமா.
3.    மும்பையில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் போராட்டம்.
4.    மம்தா கட்சி மத்திய இணை அமைச்சர் சிசிர்அதிகாரி, வங்க       
       தேசத்திலிருந்து ஆயுதம் கடத்தல்-நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு.
6.    மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல்   
       காசப்புக்கு தூக்கு தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
28.  மேற்குவங்கத்தில் ரயில் தண்டவாளங்களை மாவோயிஸ்டுகள்  குண்டு
       வைத்து தகர்த்தனர்- மும்பை ரயில் கவிழ்ந்து 71 பயணிகள்     சாவு.
30.  ஜார்கண்ட் முதல்வர் பதவியிலிருந்து சிபுசோரன் ராஜினாமா.  

ஜூன் 

1.     ஜார்கண்டில் மீண்டும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.
7.     போபால் விஷவாயு வழக்கில் 8 பேருக்கு இரண்டாண்டு சிறை.
9.     நிவாரண உதவி கப்பல்களை தாக்கிய இஸ்ரேலை கண்டித்து  
        இந்தியாவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்.
13.   நாகா பிரிவினைவாதிகளின் ஒருமாத தடையால் மணிப்பூர் மக்களின் 
        இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
14.  கங்கை நதியில் படகு மூழ்கி 45 பேர் சாவு.
15.   மணிப்பூர் : நாகா குழுக்கள் தற்காலிக விளக்கம்.
29.   சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.

ஜூலை

6.    ஸ்ரீநகரில் பொதுமக்கள் - போலீஸ் மோதல் 4 பேர் பலி. ஜம்மு- காஷ்மீரில்
       ஊரடங்கு அமல்.
6.    மும்பையில் கனமழை: இரண்டுகட்டிடங்கள் இடிந்தன.
8.    அசாம் - கேரளாவில் பருவமழைக்கு 53 பேர் பலி.
8.    மாவோயிஸ்ட் பந்த் - சத்தீஸ்கரில் ரயில் நிலையம் தகர்ப்பு.
8    காஷ்மீரில் மேலும் பல பகுதிகளில் ஊரடங்கு நீடிப்பு.
12.  5 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில்  
       வெற்றிப்பயணம்.
14.     மும்பையில் குளோரின் வாயு கசிவு 103 பேருக்கு பாதிப்பு.
16.     தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிராவில் கைது.
19.     மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதல்-63 பேர் சாவு 92 பேர் காயம்.
24.    சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளி: குஜராத்  
          உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா.
25.     குஜராத் அமித்ஷா கைது.
27.     விலை உயர்வு: எதிர்க்கட்சிகள் அமளி, இரு அவைகளும்     ஒத்திவைப்பு.

ஆகஸ்ட்

2.    காஷ்மீர் கலவரம் - பலி 15 ஆனது.
7.    ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழைக்கு பலி 130 ஆக உயர்வு 600 பேர்     மாயம்.
7.    மகாராஷ்டிராவில் ஐந்து விவசாயகிள் தற்கொலை.
9.    ஒரிசாவில் மழை வெள்ளம்: 85 ஆயிரம் பேர் பாதிப்பு.
15.  சுதந்திர தின நிகழ்ச்சி முதல்வர் உமர் அப்துல்லா மீது போலீஸ்காரர் ஷு 
      வீச்சு.
18.    ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு.
18.    உத்தர்காண்ட்: பள்ளி கூரை இடிந்து 18 சிறுவர்கள் சாவு.
21.    உ.பி. தடுப்பூசி போட்ட குழந்தைகள் சாவு.
25.   அமெரிக்காவுக்கு ஆஜரான அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா
        நிறைவேறியது.
26.     மாவோயிஸ்டுகளுடன்பேச்சு நடத்த அரசு தயார்: மன்மோகன் சிங்.
29.     பீகார் போலீசார் மவோயிஸ்டுகளால் கடத்தல்.

செப்டம்பர்

6.      பீகார் சட்டப்பேரவைக்கு 6 கட்ட தேர்தல் அறிவிப்பு.
9.      கேரளா: கலப்பட கள் குடித்து பலி 25 ஆக உயர்வு.
10.    வட மாநிலங்களில் பலத்த மழை லட்சக்கணக்கானோர் பாதிப்பு.
12.    மருத்துவ கல்லூரி ஊழியர்நியமனத்தில் முறைகேடு; கர்நாடக 
         அமைச்சர் ராமச்சந்திர கௌடா ராஜினாமா.
14.    வன்முறையால் காஷ்மீர் எரிகிறது.
14.    ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு: அர்ஜூன் முண்டா வெற்றி.
14     அசாம் வெள்ளம்: 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.
19.    ஒரு வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 108 பேர் பலி.
20.    மத்தியப்பிரதேசத்தில் ரயில்கள்மோதல் - 21 பேர் சாவு.
20.    காஷ்மீர்;அனைத்து கட்சி குழு ஆய்வு.
20.    சத்தீஸ்கர் : 7 போலீசாரை மாவோயிஸ்டுகள் கடத்தினர்.
21.    தில்லி நேரு ஸ்டேடிய நடைபாலம் சரிந்து 27 பேர் காயம்.
22.    தில்லி நேரு ஸ்டேடிய அலங்கார கூரை ஓடுகள் சரிந்தன.
23.    அயோத்தி: தீர்ப்பு ஒத்திவைப்பு.
30.    அயோத்தி பிரச்சனை: சன்னி வக்பு வாரியம், நிர்மோரி அகாரா  மற்றும் 
          ராம்லல்லா வீரஜ்மான் ஆகிய அமைப்புகளுக்கு 27 ஏக்கர்நிலம்  சமமாக 
          பிரித்தளிக்கப்படவேண்டும் -அலகாபாத் உயர்நீதிமன்றம்  தீர்ப்பு.  

அக்டோபர்

2.    காமன்வெல்த் விளையாட்டுக்கள் ஆரம்பம்.
6.    கர்நாடகம்: எடியூரப்பா அரசுக்கு நெருக்கடி - 7 அமைச்சர்கள் உட்பட  19 
       எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ்.
11.    கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு.
21.    பீகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்.   

நவம்பர்

8.    அசாமில் போடோ தீவிரவாதிகள் தாக்குதல் 18பேர் சாவு.
9.    ஆதர்ஷ் முறைகேடு: மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவாண் நீக்கம்.
9.    காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி 
        ராஜினாமா.
14.    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா.
15.    தில்லியில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து 32 பேர் பலி.
16.    ஸ்பெக்ட்ரம் விவகாரம் - பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
24.    ஆந்திர முதல்வர் ரோசய்யா திடீர் ராஜினாமா.
24.    பீகார்: ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 206 இடங்களில் வெற்றி.
25.    ஆந்திரா; புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு.
27.    2ஜி ஸ்பெக்ட்ரம்: ஆலோசனை தொகையாக ரூ.60 கோடி  வாங்கினேன் - 
         நீரா ராடியா ஒப்புதல்.
30.    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவிசாரணைக்கு 
          உத்தரவிட அரசை வலியுறுத்துங்கள் - ஜனாதிபதியிடம் இடதுசாரி 
         கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் முறையீடு.  
  
டிசம்பர்

1.    பங்குகளை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி பிஎஸ்என்எல் 
       அதிகாரிகள், ஊழியர்கள் நாடு தழுவிய     வேலைநிறுத்தம்.
7.    ஸ்பெக்ட்ரம் ஊழல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக்கோரி   பாஜக
         அல்லாத எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில்     தர்ணா.
14.    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு.
15.    ஆ.ராசா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ     சோதனை.
17.    ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய
         நிவாரணம் வழங்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்
         துவங்கினார்.
22.    பிரித்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி.
22.    ஆந்திராவில் தொடரும் விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு   
           தலையிட கோரி அனைத்து கூட்டுக்குழு பிரதமரைச் சந்தித்தது.
23.     கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன் மறைவு.
24.     ஆந்திராவில் 8 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சந்திரபாபு
           நாயுடு முடித்துக் கொண்டார்.  
30      தெலுங்கானா, ஆந்திரா பிரிக்கும் ஸ்ரீகிருஸ்னா கமிட்டி அறிக்கை இன்று
           மக்களவையில்  தாக்கல் செய்யப்படுகிறது.
 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நவ்வாழ்த்துக்கள். 

படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,உலவு ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
 
 
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க..

12/30/2010

அடைக்கலம் தேடிவந்த இளம்பெண்ணை கற்பழித்த மாயாவதி

அடைக்கலம் தேடிவந்த இளம்பெண்ணை கற்பழித்த மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.; திருட்டு பட்டம் சுமத்தி ஜெயிலில் தள்ளினார்
 
உத்தரபிரதேச மாநிலம் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. புருஷோத்தம் நரேஷ். இவர் பந்தா மாவட்டம் நாராயணி தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்டார்.
 
இவர் மீது மைனர் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நீலாவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த அக்டோபர் மாதம் நீலாவதி யின் தாய் இறந்து விட்டார். இதனால் தந்தை அச்சிலால் மகளை வளர்க்க முடியாமல் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
 
அப்போது நீலாவதியை பக்கத்து வீட்டுப் பெண் நைசாக பேசி பழக்கம் பிடித் தார். பின்னர் நீலாவதியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி உள்ளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலாவதியை தேடிவந்தனர்.
 
இதற்கிடையே மகள் கடத்தப்பட்டதை அறிந்து தந்தை அச்சிலால் உள்ளூர் எம்.எல்.ஏ.வான புருஷோத் தம் நரேஷ் உதவியை நாடி னார்.
 
அவர் தனது ஆட்கள் மூலம் நீலாவதி இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டார். பின்னர் அவளை தனது வீட்டிலேயே சில நாட்கள் தங்கி இருக்கட்டும் என்று சொன்னார். அதற்கு அவளது தந்தையும் சம்மதித்தார்.
 
சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி நீலா வதியை எம்.எல்.ஏ.வே கற்பழித்தார். அவரது கொடுமை தாங்க முடியாமல் நீலாவதி அங்கு இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்தாள்.
 
இதற்கிடையே எம்.எல்.ஏ. புருஷோத்தம் போலீஸ் நிலையத்தில், நீலாவதி மீது திருட்டு பட்டம் சுமத்தி புகார் செய்தார். தனது வீட்டில் இருந்த துப்பாக்கியையும், ரூ.2 லட்சத்தையும் திருடி சென்று விட்டதாக புகாரில் எம்.எல்.ஏ. கூறியிருந்தார்.
 
இதற்கிடையே நீலாவதி தனது தந்தையிடம் சென்று எம்.எல்.ஏ. கற்பழித்த விவரத்தை கூறினார். ஆவேசம் அடைந்த அவர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து நியாயம் கேட்க புறப்பட்டார்.
 
ஆனால் எம்.எல்.ஏ. அவர் களை மிரட்டி கற்பழிப்பு விஷயம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று அடக்கி விட்டார்.
 
போலீசார் எம்.எல்.ஏ. கொடுத்த புகாரின் பேரில் நீலாவதியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இது இன்று மாலை ஒரு செய்திதாளில் வந்த செய்தி.

இதுதான் இன்றைய இந்தியா.... 
 
இதற்கான தீர்வுகளை பின்னூட்டம் இடவும்....
 
படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
 
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...  
 
 
 
   

12/29/2010

ஒரு வேதனை நம் ஜனநாயகம் சமாதியாகுமா?

ஒரு வேதனையான கேள்வி  நம் ஜனநாயகம் சமாதியாகுமா?
"ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் டேப் புகழ் நிரா ராடியாவை, அவரது பண்ணை வீட்டிற்கே சென்று, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை செய்தனர்' என்ற செய்தியை படித்தேன். சாதாரணமாக விசாரிக்க வேண்டியவர்களை, அலுவலகத்திற்கு வரச் சொல்லி விசாரிப்பது தான் சி.பி.ஐ.,யின் வழக்கம். நிரா ராடியா என்ன சாதாரணமான ஆளா? தொழிலதிபர் டாடாவிற்கு மிகவும் வேண்டியவராயிற்றே! அவரைக் கூப்பிட்டால், டாடா கோபித்துக்கொள்ள மாட்டாரா? 
 ஐநூறு ரூபாய் திருடினால், ஜட்டியோடு நிற்க வைத்து லாடம் கட்டுவர். கோடி, கோடியாக கொள்ளை அடித்தால், அவர்களுக்கு மரியாதையே தனிதான். 
தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரும், மக்களின் மனம் கவர்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், லட்சுமி காந்தன் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். காரணம், லட்சுமி காந்தனைக் கொலை செய்தனர் என்பதனாலல்ல; லட்சுமி காந்தனைக் கொலை செய்வதற்காக, சென்னை ஒற்றைவர் டை தியேட்டரில், கோவை ஸ்ரீராமுலு நாயுடு, இன்னும் சிலருடன் கூடி சதித் திட்டம் தீட்டினர் என்பதற்குத் தான்.
சரி... நிரா ராடியா டேப்பின் மூலம் நமக்குத் தெரிவது என்ன? மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை எப்படியாவது பெற்று, அதன் மூலம், அரசின் கோடானு கோடி பணத்தை கொள்ளையடிக்க வேண்டுமென்று, முன் கூட்டியே திட்டமிட்டனர் என கருத்து தோன்றுகிறது.
 நாட்டின் செல்வத்தை, இவர்கள் இப்படி கொள்ளையடிப்பதற்காகவா வ.உ.சி., செக்கிழுத்தார்? இந்தப் பாதகர்களுக்காகவா பகத்சிங் தூக்கில் தொங்கினார்? இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமானால், எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறை என்ற பாரதியின் வாக்கு காக்கப்படவேண்டுமானால், ஒண்ணே முக்கால் லட்சம் கோடியை விழுங்கத் திட்டமிட்டு, சதி செய்தவர்களையும், நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்த தேசத் துரோகிகளையும், சிறையில் தள்ள வேண்டும். 
நேர்மையில்லாத வழியில் சம்பாதித்த அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். தவறினால், ஜனநாயகம் சமாதியாகும் என்பதில் ஐயமில்லை.(நன்றி தினமலர்)   
படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
 
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...                                  

12/28/2010

நாம் இந்தியர்களா?


இது  என்னுடைய 100 ஆவது பதிவு.

சுதந்திரப் போராட்ட காலங்களில், பதிவு செய்யப்பட்ட ஒரு குற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக சாட்சி சொல்வதற்கு, அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு, கோர்ட் கூண்டில் ஏறினார். அவருடன், இந்திய நாட்டின் முதல்  இந்திய கவர்னர் ஜெனரலான ராஜகோபாலாச்சாரியாரும் சாட்சி சொன்னார். இரு பெரும் தலைவர்கள் சாட்சி கூறினர் என்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவரை கோர்ட் விடுதலை செய்து விடவில்லை

அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருதி, அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் வெறும் கற்பனையல்ல... உண்மையில், நம் நாட்டில் நடந்த ஒரு வரலாற்று சான்று; கோர்ட்டின் மாண்பை பறைசாற்றும் சம்பவம். 

ஆனால், இன்று, நீதிபதிகளை மிரட்டும் அரசியல்வாதிகள், ஐகோர்ட் நீதிபதி சொன்ன புகாரை மறைக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஊழல் விசாரணைக்காக பார்லிமென்ட் கூட்டுக் குழுவை கூட்ட, சபையை முடக்கும் எதிர்க்கட்சிகள், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லையா?' எனக் கூறும் ஆளுங்கட்சிகள், 

அரசு உயரதிகாரிகளின் லஞ்சம் என, இந்நாட்டையே உலுக்கிக் கொண்டிருப்பவைகளை யார் கேட்பது? அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதனால் பயன் பெறுவதால், அவர்கள் இதைத் தட்டிக் கேட்பதற்கு வாய்ப்பில்லை. இவற்றை தட்டிக் கேட்கும் சகல தகுதிகளுடைய பொது மக்கள், இன்றைய விலைவாசி உயர்வால், ஒவ்வொரு பொழுதையும் கடத்த பாடுபடும் கஷ்டத்தில், திராணியற்று கிடக்கின்றனர். 
( நன்றி எஸ்.ரவீந்திரன், கோவை )

ஊழலின் அளவு பெரிதாக பெரிதாக, மக்களிடம் அது பற்றிய விழிப்புணர்வும் அதிகமாகிறது. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும், கல்வி அறிவு பெற்று, ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
 
 
அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

12/27/2010

நன்றி ! நன்றி !! நன்றி !!!

BLOG ஆரம்பித்த கொஞ்ச நாட்களிளே  இந்த வாரம்  18 - ம்  இடத்தில் என்னை வைத்த தமிழ்மணம் நிர்வாகம்,நண்பர்கள்,பதிவர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த பிளாக் ஆரம்பிக்கும் போது GK - Blog ஆகத்தான் ஆரம்பிச்சேன், ஆன யாரும் படிக்கவில்லை . நண்பா் சௌந்தர் (kavithaiveehi.blogspot.com)ஆலோசனைப்படி இதை ஜனரஞ்சகமாக மாற்றிய பிறகு  பல வாசகர்கள் கிடைத்தார்கள். 

மேலும் எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் NKS.ஹாஜா மைதீன் , ரஹீம் கஸாலி
, ஆமினா  போன்ற  நண்பர்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

நான் ஓரளவு பிரபலமானபிறகு பழைய நிலைக்கு திரும்பிவிடுவேன்..

மீண்டும் ஒருமுறை அணைவருக்கும்  நன்றி ! நன்றி !! நன்றி !!!

12/24/2010

நாம் முட்டாள்களா?


ஒவ்வொரு இந்தியனின் மனதில் தோன்றும் கேள்வி?
ஏன்? கூட்டு குழு விசாரணை வேண்டாம்  என ஆளும் கட்சி சொல்கிறது?
இந்தியா முழுவதும் நடந்த சி.பி.ஐ ரெய்டை பல ஊடகங்கள் மூலம் நாடே உண்ணிப்பாக கவனித்து கோண்டிருக்கிறது.

இத்தனை நடந்தும் கூட்டணி பற்றி கவலை இல்லை என்கிறார்கள் ஆளும்கட்சி மற்றும் தி.மு.க தலைவர்கள்.

‌பிரதமரோ மவுனம், சோனியாவோ எதிர்கட்சிகளை குறைகூறிக்கொண்டிருக்கிறார்.

“என்னதான் நடக்கும் நடக்கட்டு‌மே
இருட்டினில் நீதி மறையட்டு‌மே...
தன்னாலே வெளிவரும் தயங்காதே....
என ஒவ்வொரு இந்நியனும் நம்பிக்கையோடு இருப்போம்,

நம்மை முட்டாளாக்கி கொண்டிருக்கும் இவா்களை என்னசெய்துவிட முடியும் நம்மால் ... 

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த கருண்குமாரின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் .


12/22/2010

காதலிக்க கற்றுகொள்ளுங்கள்


பெண்மையை போற்றுவோம்

காலையில் எழுந்த கணம் முதல்... கணவனை எழுப்பி காஃபி கொடுப்பதில் ஆரம்பித்து, பிள்ளைகள் எழுப்பி, அவர்களைக் குளிப்பாட்டி பள்ளிகளுக்கு அனுப்பவும், இங்கும் அங்கும் ஓடியாடி  சமையலை முடித்து, தானும் குளித்துத் தயாராகி குடும்பத்தோடு அமர்ந்து வேக வேகமாக சாப்பிட்டு , மதிய உணவை கட்டிக்கொண்டு அலுவலகத்திற்குப் பறந்துச் சென்று, வேலையில் மூழ்கி புன்னகைத்த முகத்துடன் பணிகளை முடித்து, மாலையில் இல்லம் திரும்பியதும் வேலை.

தன் குடும்பத்தினரின் தேவைகளை முடித்து - தன்னைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லாமல் - படுக்கைக்குத் திரும்பும்போதும்... அந்த முகத்தில் காலையில் மலர்ந்த புன்னகை மட்டும் மாறுவதில்லை.

இதுதான் இன்றைய மங்கையின் அன்றாட நாட்குறிப்பு. ஒருபக்கம் அலுவலகமும் சமூகமும், மறுபக்கம் குடும்பம், குழந்தைகள், பண்டிகைகள். எல்லாவற்றையும் தனக்கே உரித்தான சாதுரியத்துடனும், தெளிவுடனும் செய்து முடிப்பவள். இன்றைய நவீன சமூகத்தில் அவளுக்குறிய இடம் இதுதான்.
 காலத்தின் போக்கிலும், நாகரீகத்தின் ஏற்றத்திலும் மிகவும் மாறியவர்கள். இந்திய நாட்டின் முன்னேற்றப் பாதையே படித்துத் தகுதி பெற்ற பெண்கள்தான் என்று கூறுமளவிற்கு தகுதிபெற்றவர்கள். ஆண்களுக்கு நிகரான தகுதியிடனும், திறனுடனும் அவர்கள் உழைக்கின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, கலை என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உயர்நிலைகளில் அவர்களும் உள்ளனர்.

இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.

பெண்கள் பலவீனமானவர்கள் என்று காலம் காலமாக கூறி வருகின்றனர். அதையே காரணமாக்கி எல்லாத் துறைகளிலிருந்தும் அவளை ஒதுக்கிவைத்தனர். இதனை கணினி யுகம் மாற்றிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவள் நிலை உயர்ந்துள்ளது. ஒடுங்கிக்கிடந்த உள் உலகத்திலிருந்து அவள் வெளியுலகத்திற்கு வந்துள்ளாள்.

மற்றவர்களைப் போல என்னாலும் எதையும் செய்ய முடியும், சாதிக்க முடியும், அதற்கான மனோபலமும், ஆற்றலும் என்னிடம் உள்ளது என்று கூறும் அளவிற்கு அவள் நிலையும், மனமும் உயர்ந்துள்ளது. நவீன யுகத்தில் தன்னம்பிக்கையுடன் அவள் பணியாற்றி வருகிறாள்.

பெண்களே, ‘பலவீனமானவள் நான்’ என்று நீங்களே உங்களை நினைக்காதீர்கள். சமூகத்தில் நமக்கு உறுதியான இடம் கிடைத்துள்ளது. நம்மிடம் பலமும், திறனும் உள்ளது, எந்தத் துறையிலும் செயலாற்றும் திறன் நம்மிடம் உள்ளது. அதனை உறுதியாக உலகிற்கு எடுத்துரைப்போம்.

நம் இரத்ததோடு கலந்து, நம்மையும் , நம் சந்ததியையும் வளர்க்கும்  பெண்மையை போற்றுவோம்.
 அவர்களின் அன்பை வேண்டி காதலிப்போம்.

Today Maths Day - கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

இன்றைய  இளைய தலைமுறையினர் கணித மேதை பற்றி தெரிந்துகொள்வதற்காக இப் பதிவினை பெரியதாகவே தருகிறேன்.

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.


இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 

எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 

12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. 

முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை

பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறினான். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். 

கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.

ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. 

 அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. 

தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.

1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். 

ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். 

சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் 

‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம்.
ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது சுற்றுச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான்.

கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914-1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. 

நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. 

இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான் விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.


இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.


சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. 

பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.

துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. 

இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919-20 இல் செய்த ஆராய்ச்சிகள்.
ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது:


மூன்று நோட்புக்குகள்

• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913-1914)

• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்

• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்

இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது.

பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’.


இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம்.

முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். 

அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். 

இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார்.

இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். 

அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்:
x2 − 10y2 = + 1or − 1
மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்:
3 + \cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\dotsb}}}}

இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார்.

இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு
3 + 1/6 = 19/6.
x =19, y = 6 இரண்டாவது விடை.
192 − 10 * 62 = 361 − 360 = 1
மூன்றாவது ஒருங்கு:
3 + \cfrac{1}{6+\cfrac{1}{6}}

இது கொடுக்கும் விடை: x = 117, y = 37

இதுவும் ஒரு சரியான விடைதான்.

நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228.

இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது.

சிறப்புக்கள்

  • 1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார்.
  • கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.
  • ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
  • இவருடைய "மாக் தீட்டா ஃபங்சன்ஸ்" எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.
  • கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இராமானுசன் கணிதத்துளிகள்

16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக்கூடியதாகவும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய சில கணிதத்துளிகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. விபரங்களை உரிய இடங்களில் பார்க்கலாம்.
  • மஹலனோபிஸ்ஸை வியக்க வைத்த தொடரும் பின்னமும் அதை ஒட்டிய வரலாறும்.
  • எண் பிரிவினைக்கு ஒரு வாய்பாடு.
  • இரண்டாவது நோட்புக்கில் அடிக்கப்பட்ட ஒரு குறிப்பிலும் உயர்ந்த கணிதம். 
  • ரீமான் சரத்தை யூகித்தறிதல். 
  • தொலைந்த நோட்புக்கிலிருந்து ஒரு விந்தைச்சமன்பாடு. 
  • எண் பிரிவினைச் சார்பைப் பற்றி ஒரு யூகம்.
  • τ-சார்பு. 
  • டௌ-சார்பைப்பற்றிய புகழ்பெற்ற யூகம்.

12/21/2010

உங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்

உங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்

என்னதான் பொது அறிவு பற்றி  தேடிபிடித்து எழுதினாலும்  என் பிளாக்  ‌நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவர் ஈசன் திரைப்பட விமர்சனத்தை  எனக்கு பிடித்த பதிவரான cablesankar அவர்களின் பதிவிலிருந்து copy அடித்து  எழுதினார், அந்த பதிவு  ஒரே நாளில் 1000 வாசகர்களை  இழுத்தது.
(  அதற்காக copy அடியுங்கள்  என்று  சொல்லவில்லை)

நல்ல விஷயங்களை  உங்கள் பிளாகில் பகிருங்கள் கன்டிப்பாக  ஒருநாள் பிரபலமாகும்.

திருமணத்துக்கு முன்பே “செக்ஸ்”

திருமணத்துக்கு முன்பே “செக்ஸ்”: செல்போன் பெருக்கத்தால் கள்ளத்தொடர்பு அதிகரிப்பு; ஆய்வில் தகவல்.

ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள கடித போக்குவரத்து மட்டுமே இருந்தது. பின்னர் டெலிபோன்கள் வந்தன. ஆனாலும் வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே இருந்தனர்.
ஆனால் இப்போது செல்போன் வந்து விட்டது. ஆரம்பத்தில் ஒரு சிலரிடமே செல்போன் இருந்த நிலை மாறி இப்போது செல்போன் இல் லாதவர்களே இல்லை என்ற நிலைக்கு சென்றுள்ளது.
இது மக்களுக்கு பெரும் நன்மை அளித்தாலும் ஒருசில பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதெல்லாம் திருமணத்துக்கு முன்பே செக்ஸ், கள்ளத்தொடர்பு போன்றவை அதிகரித்து உள்ளன. இதற்கு செல்போன் தான் காரணம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் செயல்படும் சினாட் சமூக முன்னணி என்ற கிறிஸ்தவ அமைப்பு இந்த ஆய்வை நடத்தியது. அதில் செல்போன் பெருக்கத்தால் மக்கள் ஒருவரை ஒருவர் எளிதில் தொடர்பு கொண்டு விடுகிறார்கள்.

இதன் மூலம் ஆண்- பெண் நட்பு அதிகரித்து கள்ளத்தொடர்பு, திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு போன்றவை அதிகரித்து இருக்கிறது என தெரியவந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் ஆர்வம் இளைஞர்களி டையே அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்

வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்

2010 - ரிச்சர்டு ஃகெக் (Richard F. Heck - அமெரிக்கர்), ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi - நிப்பானியர் (சப்பானியர்)), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki - நிப்பானியர் (சப்பானியர்)).
2009 - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Venkatraman Ramakrishnan - இந்திய அமெரிக்கர்), தாமஸ் ஸ்டைட்ஸ் (Thomas Steitz - அமெரிக்கர்), அடா யோனத் (Ada Yonath - இஸ்ரேலியர்).
2008 - ஓசாமு ஷிமோமுரா (Osamu Shimomura - ஜப்பானிய அமெரிக்கர்), மார்ட்டின் சால்ஃபி (Martin Chalfie - அமெரிக்கர்), ரோஜர் சியேன் (Roger Tsien - அமெரிக்கர்).
2007 - கெரார்டு எர்ட்டில் (Gerhard Ertl  ஜெர்மனி).

2006 - ரோஜர் கோர்ன்பெர்க் (Roger D. Kornberg  ஐக்கிய அமெரிக்கா).
2005 - இராபர்ட் ஃகிரப்ஸ் (Robert Grubbs), இரிச்சர்ட் ஷ்ராக் (Richard Schrock), யெஸ் ஷெளவின் (Yves Chauvin).
2004 - ஆரோன் சீசனோவர் (Aaron Ciechanover), அவ்ரம் ஹெர்ஷ்கோ (Avram Hershko), இர்வின் ரோஸ் (Irwin Rose).
2003 - பீட்டர் ஆக்ரெ (Peter Agre), ரோடெரிக் மெக்கினோன் (Roderick MacKinnon).
2002 ஜான் B. ஃபெண் (John B. Fenn), கொய்ச்சி டனாகா (Koichi Tanaka), குர்ட் உத்ரிச் (Kurt Wüthrich).
2001 வில்லியம் எஸ். நோல்ஸ் (William S. Knowles), உருயோஜி நோயோரி(Ryoji Noyori), கே. பேரி ஷார்ப்லெஸ் (K. Barry Sharpless).
2000 - ஆலன் ஹீகர் (Alan Heeger), ஆலன் G. மெக்டியர்மிட் (Alan G. MacDiarmid), ஹிடேகி ஷிரகாவா (Hideki Shirakawa).


1999 அஹமது ஸெவயில் (Ahmed Zewail)
1998 Walter Kohn, John Pople
1997 Paul D. Boyer, John E. Walker, Jens C. Skou
1996 Robert F. Curl Jr., Sir Harold Kroto, Richard E. Smalley
1995 Paul J. Crutzen, Mario J. Molina, F. Sherwood Rowland
1994 George A. Olah
1993 Kary B. Mullis, Michael Smith
1992 Rudolph A. Marcus
1991 Richard R. Ernst
1990 Elias James Corey
1989 Sidney Altman, Thomas R. Cech
1988 Johann Deisenhofer, Robert Huber, Hartmut Michel
1987 Donald J. Cram, Jean-Marie Lehn, Charles J. Pedersen
1986 Dudley R. Herschbach, Yuan T. Lee, John C. Polanyi
1985 Herbert A. Hauptman, Jerome Karle
1984 Bruce Merrifield
1983 Henry Taube
1982 Aaron Klug
1981 Kenichi Fukui, Roald Hoffmann
1980 Paul Berg, Walter Gilbert, Frederick Sanger
1979 Herbert C. Brown, Georg Wittig
1978 Peter Mitchell
1977 Ilya Prigogine
1976 William Lipscomb
1975 John Cornforth, Vladimir Prelog
1974 Paul J. Flory
1973 Ernst Otto Fischer, Geoffrey Wilkinson
1972 Christian Anfinsen, Stanford Moore, William H. Stein
1971 Gerhard Herzberg
1970 Luis Leloir
1969 Derek Barton, Odd Hassel
1968 Lars Onsager
1967 Manfred Eigen, Ronald G.W. Norrish, George Porter
1966 Robert S. Mulliken
1965 Robert B. Woodward
1964 Dorothy Crowfoot Hodgkin
1963 Karl Ziegler, Giulio Natta
1962 Max F. Perutz, John C. Kendrew
1961 Melvin Calvin
1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (Willard F. Libby)
1959 Jaroslav Heyrovsky
1958 Frederick Sanger
1957 Lord Todd
1956 Sir Cyril Hinshelwood, Nikolay Semenov
1955 Vincent du Vigneaud
1954 Linus Pauling
1953 Hermann Staudinger
1952 Edwin M. McMillan, Glenn T. Seaborg
1951 Max Theiler
1950 Otto Diels, Kurt Alder
1949 William F. Giauque
1948 Arne Wilhelm Kaurin Tiselius
1947 Sir Robert Robinson
1946 James B. Sumner, John H. Northrop, Wendell M. Stanley
1945 Artturi Virtanen
1944 Otto Hahn
1943 George de Hevesy
1942 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1941 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1940 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1939 Adolf Butenandt, Leopold Ruzicka
1938 Richard Kuhn
1937 Albert Szent-Györgyi
1936 Norman Haworth, Paul Karrer
1935 Peter Debye
1934 Harold C. Urey
1933 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1932 Irving Langmuir
1931 Carl Bosch, Friedrich Bergius
1930 Hans Fischer
1929 Arthur Harden, Hans von Euler-Chelpin
1928 Adolf Windaus
1927 Heinrich Wieland
1926 The Svedberg
1925 Richard Zsigmondy
1924 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1923 Fritz Pregl
1922 Francis W. Aston
1921 Frederick Soddy
1920 Walther Nernst
1919 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1918 Fritz Haber
1917 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1916 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
1915 Richard Willstätter
1914 Theodore William Richards
1913 Alfred Werner
1912 Victor Grignard, Paul Sabatier
1911 Maria Skłodowska-Curie
1910 Otto Wallach
1909 Wilhelm Ostwald
1908 எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு (Ernest Rutherford)
1907 எடுவர்டு பூக்னர் (Eduard Buchner)
1906 Henri Moissan
1905 Adolf von Baeyer
1904 Sir William Ramsay
1903 Svante Arrhenius
1902 Emil Fischer
1901 Jacobus H. van 't Hoff

VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS - உங்களுக்குத் தெரியுமா ?

 VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS - உங்களுக்குத் தெரியுமா ?


  • அனைத்துலக பல்லுயிர்ம ஆண்டாக 2010 ஆம் ஆண்டை ஐ.நா. அறிவித்துள்ளது;
  • 1842 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் 1947ஆம் ஆண்டு வரை இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
  • லியனார்டோ டா வின்சி ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கையால் வரையும் திறன் கொண்டிருந்தாராம்.
  • ஒரு மின்னல் கீற்று வளிமண்டலத்தை 50,000 டிகிரி பாரன்ஹைட் வரையில் சூடேற்றுகிறது.
  • முதல் சிப்கோ இயக்கம் (1974)கார்வாலில் நடைபெறவில்லை; 1730 -ஆம் ஆண்டில் ஜோத்பூர் மாவட்டத்தின் கேஜார்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த 363 பிஷ்னோய் இன மக்கள் அவர்களின் புனித மரமான கேஜ்ரியைக் (வன்னி மரம்) கட்டியணைத்தவாறு உயிர் துறந்தனர்.
  • காவலூரிலுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன் 1988 பெப்ருவரி 17 அன்று ஒரு சிறிய கோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் அன்றில், glossy ibis (Plegadis falcinellus) என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.
  • தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட பரிதிமாற்கலைஞர் முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
  • சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையமே இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாகும்; இது 1844 இல் ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது.
  • ஆப்பிரிக்காவில் "தஜீரா" எனும் ஆறு தலைகீழாக ஓடுகிறது. அதாவது அந்த ஆறு கடலில் உற்பத்தியாகி ஒரு ஏரியில் சங்கமமாகிறது.
  • சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.
  • 1896, ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் வைட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.
  • துருக்கி யைச் சேர்ந்த ஒரு கிராமம் கஸ்கோய். இங்கு வசிப்பவர்கள் சீழ்க்கை அடிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இங்கு பல நூற்றாண்டுகளாக சீழ்க்கை மொழி வழக்கத்தில் இருக்கிறதாம்.
  • தனித்தனியே எடைபோடப்பட்ட ஒரு டன் மரத்தையும் ஒரு டன் இரும்பையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து எடை போட்டால் மரத்தின் எடை இரும்பின் எடையை விட சற்று கூடுதலாக இருக்கும். இதை ஆர்க்கிமிடிசு தத்துவத்தின் அடிப்படையில் விளக்க முடியும்.
  • சூரியவொளி யில் உள்ள ஊதா, நீல நிறங்கள், அலைநீளம் அதிகமுடைய செந்நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப்பட்டு, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.
  • உலகில் மிகப் பெரிய மியூசிக்கல் சேர் போட்டி 1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அமெரிக்காவில் உள்ள இன்டியானா நகரில் நடந்தது. 5,151 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பில்பிரான்சன் என்பவர் வெற்றி பெற்றார்.
  • ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.
  • ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவு ஒளியாண்டு எனப்படுகிறது. ஒரு நொடிக்கு ஒளியானது 186,000 மைல்கள் செல்கிறது.
  • பூமி உண்மையில் உருண்டையல்ல. நிலநடுக்கோட்டின் வழியாக இதன் விட்டம் 12,756 கிமீ. ஆனால் வட, தென் துருவ வழியாக இதன் விட்டம் 12,713 கிமீ. பூமியின் எடை 5976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன்.
  • வவ்வால்கள் புறவொலி அலை களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வலைகள் தடைகளின் மீது பட்டு, வவ்வால்களுக்கேத் திரும்பி வருகின்றன. இதன் மூலம் வழி அறியும் வவ்வால்கள் இருளிலும் பறக்கின்றன.
  • பெப்ரவரி 29 அன்று பிறந்தவர்களுக்காக நான்காண்டுகளுக்கு ஒருமுறை நியூமெக்சிகோவிலுள்ள "அந்தோணி” எனுமிடத்தில் மிகப்பெரிய விழா பெப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
  • கல்திட்டைகள் எனப்படுவன பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். தமிழகத்தைச் சேர்ந்த கே. டி. காந்திராசன் கல்திட்டைகளில் வரையப்படும் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றார்.
  • ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இரட்டைச்சதம் அடித்த பெண் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க். இவர் டென்மார்க் பெண்கள் அணியை எதிர்த்து ஆடி 226 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தார்.
  • தமிழகத்தின் மரபுக்கலைகளான பொம்மலாட்டத்தையும் தோல் பாவைக்கூத்தையும்  நிகழ்த்தும் கலைஞர்கள் மிகவும் சொற்பமான அளவிலேயே உள்ளனர். அழிவை நோக்கியிருக்கும் இக்கலைகளைக் காக்கும் பொருட்டு பாவை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
  • ஒரு-நாள் பன்னாட்டு கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் இலங்கையின் சனத் ஜெயசூரியா (444 போட்டிகள்); இதையடுத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர் (442 போட்டிகள்).
  • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய வழிபாட்டு இடங்கள் நிழல் தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மதப்புரட்சியை ஏற்படுத்தின.
  • கடலின் ஆழத்தை அறிவதற்கு ஒரு வெடியை வெடித்து அது ஏற்படுத்தும் ஒலியைக் கடலின் அடிப்பாகத்திற்கு அனுப்பித் திரும்பப் பெறுகிறார்கள். ஒலி அலை ஊடுருவிச் சென்று வர எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். உப்பு நீரில் ஒலி ஒரு நொடிக்கு 1425 மீட்டர் செல்லும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
  • நிலநடுக்கத்தால் மாபெரும் பாதிப்பிற்குள்ளான ஹெய்ட்டி மக்களுக்கு உதவுவதற்காக வீ ஆர் த வோர்ல்ட் 25 ஃபார் ஹெய்ட்டி என்ற பாடல் இயற்றப்பட்டுள்ளது.