Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

11/30/2010

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?



”பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.

எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!
பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.

காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்..

இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.

கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.

இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.
விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.

இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படுகிறது.

புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.
வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.
இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.

இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.

அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.
அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ் வலைப்பூக்கள் - Tamil blogs

தமிழ் வலைப்பூக்கள்

தமிழில் சிலரின் கருத்துக்கள், படைப்புகள், படங்கள் என்று சிலரால் வலைப்பதிவு செய்யப்படுகின்றது. தனியார் நிறுவனங்கள் இதற்கான வலைப்பதிவு இட வசதிகளை இலவசமாக வழங்கி வருகின்றது. தமிழில் செய்யப்படும் இந்த வலைப்பதிவுகளைத் தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogs) என்கிறார்கள். 

இந்தத் தமிழ் வலைப்பூக்கள் தமிழர் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பூகோள ரீதியாக எந்தப் பிரச்சனையுமில்லாமல் தமிழர்கள் நண்பர்கள் வட்டம் அமைத்துக் கொள்கிறார்கள். நிறைய ஆக்கங்களைத் தமிழில் உருவாக்குகிறார்கள்,பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த வலைப்பூக்களில் வலைப்பதிவர்கள் அவர்கள் விரும்பும்போது மட்டும் வலைப்பதிவு செய்யப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் கருத்துக்களை உலகளாவிய தமிழ் மொழி தெரிந்தவர்களுடன் இணையத்தின் வாயிலாகப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

 இலவச இட வசதி

தமிழ் வலைப்பூக்கள் அமைக்க விரும்புபவர்கள் முதலில் அதற்கான தலைப்பைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்தத் தலைப்பு வலைப்பூ அமைக்க விரும்புபவரின் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தத் தலைப்புப் பெயரிலேயே இணைய முகவரிக்கான பெயராகவும் தேர்வு செய்து கொள்ளலாம். வலைப்பூக்கள் அமைப்பதற்கான இலவசச் சேவையை
  1. பிளாக்கர்ஸ்.காம் (http://www.blogger.com
    )
  2. வேர்டுபிரஸ்.காம் (http://www.wordpress.com
    )
போன்ற இணையச் சேவை நிறுவனங்கள் அதிகமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவை தவிர வேறு சில இணையச் சேவை நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு இடவசதியை அளித்து வருகின்றன. இவைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து அந்த நிறுவனங்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக ஒப்புதல் அளித்து இலவச இடவசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

படிம அச்சுக்கள்

வலைப்பூ அமைப்பதற்கான பக்கங்களுக்கான வடிவமைப்பின் படிம அச்சுக்கள் (Template) இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இந்த சேவை அளிக்கும் நிறுவனத்திடம் இருந்து இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொண்டு அப்படியே சிறு மாற்றங்கள் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இலவச படிம அச்சுக்கள் என்பதை ஆங்கிலத்தில் Free Template for web pages என்று தேடுபொறிகளில் (Search Engine) தேடினால் இச்சேவையை வழங்கும் பல நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும். இத்தளங்களுக்குச் சென்று நாம் விரும்பும் வடிவத்தில் இலவச படிம அச்சுக்களுக்கான உரைநடையை (Script) எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வலைப்பூக்கள் அமைப்பு

தமிழ் எழுத்துருக்கள் பல இருந்தாலும் இன்று தரப்படுத்தப்பட்ட ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி நம்முடைய கதை , கட்டுரை , கவிதை அல்லது எந்தக் கருத்துக்களையும் இந்தப் பக்கத்தில் இடுகையாக இடலாம். இந்த இடுகைகளைத் தொடர்ந்து வெளியிடலாம். இந்த இடுகைகளைப் பதிவு செய்த நாள், நேரம், இடுகையிட்டவர் போன்றவைகளை அளிக்கும் வசதிகளும் உள்ளன. இந்த இடுகைகளை மாதம் , வருடம் எனும் பிரிவின் கீழும் அல்லது தனித்தலைப்புகளின் கீழும் சேமிப்பு செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இது முந்தைய பதிவுகளைப் பார்க்க வசதியாக இருக்கிறது.
இந்த தமிழ் வலைப்பூக்களில் ஒவ்வொரு இடுகையின் கீழும் பின்னூட்டம் (Feedback) என்ற தலைப்பில் சொடுக்கினால் அந்த இடுகை குறித்த பார்வையாளர்களின் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பும் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் புகைப்படம் மற்றும் அவர் குறித்த சிறு தகவல்கள் சிறிய அளவில் வெளியிட்டு தனிப்பக்கத்தில் முழுமையாக அளிக்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வலைப்பூக்களிலும் அவர்களுக்குப் பிடித்தமான மற்ற தமிழ் வலைப்பூக்கள் மற்றும் இணைய இதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ”மிகை வாக்கியக் குறிப்பு மொழி” (HTML-Hyper Text Markup Language) எனும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வலைப்பூக்களை மேலும் அழகூட்டவும் கூடுதல் வசதிகளை அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

திரட்டிகள்

வலைப்பூக்களில் வெளியாகும் சில சிறப்பான படைப்புகளைத் திரட்டித் தரும் சில தமிழ்த்தளங்கள் இருக்கின்றன. இவைகளில்
  1. தமிழ்மணம் (இணைய முகவரி: http://www.tamilmanam.net
    )
  2. திரட்டி.காம் (இணைய முகவரி: http://www.thiratti.com
    )
  3. தகவல் இன்போ (இணைய முகவரி: http://www.thakaval.info/blogs
    )
  4. தேன்கூடு (இணைய முகவரி:http://www.thenkoodu.com
    )
  5. தமிழ்வெளி (இணைய முகவரி: http://www.tamilveli.com
    )
  6. சங்கமம் (இணைய முகவரி:http://tamil.blogkut.com
    )
  7. தமிழ்பாரதி (இணைய முகவரி: http://www.thamizhbharathi.com
    )
போன்றவை குறிப்பிடத்தக்கது.

வலைப்பூக்களின் பயன்கள்

தமிழ் மொழியில் வெளியிடப்படும் வலைப்பூக்கள் உலக அளவில் சாதி, மதம், நாடு எனும் எல்லைகளைக் கடந்து தமிழர் எனும் ஒரு இன உணர்வைத் தோற்றுவிப்பதுடன் அவர்களுக்குள் ஒரு புதிய நட்பு வட்டத்தை உருவாக்குகிறது. மேலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. தனிமனிதக் கருத்துக்கள் கூட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இன்று தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2008 நிகழ்வுகள் E-Book வடிவில்...

2008 நிகழ்வுகள் E-Book வடிவில்...

To download click here ...


http://www.4shared.com/document/l4T-7bCy/news08-tm-pdf.html

முதல் இந்திய சுதந்திரப்போர் - TNPSC, VAO, RAILWAY EXAM TIPS

TNPSC, VAO, RAILWAY EXAM TIPS...

முதல் இந்திய சுதந்திரப்போர்..... Mp 3 Format....







To Download here...


http://www.4shared.com/audio/k3aizB-V/First_indian_freedom_war.html

பெண்மையை போற்றுவோம் - அன்னை தெரேசா


அன்னை தெரேசா
பிறப்பு : ஆகஸ்டு 26 - 1910. அஸ்கப், ஓட்டோமான் பேரரசு (இன்றைய ஸ்கோப்ஜி,   மாக்கடோனியக் குடியரசு)
இறப்பு: செப்டம்பர் 5 1997 (அகவை 87). கொல்கத்தா, இந்தியா
தேசியம் :  அல்பேனியன் / இந்தியன்
அறியப்படுவது :  பிறர் அன்பின் பணியாளர் சபையின் நிறுவுனர்.
தொழில்:  ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, மனித நேய ஆர்வளர்

அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் -ன் சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட் என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980-ல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவும் பெற்றார். 

அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை விரிந்து கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளின் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ்,தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை 1985 ல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் இவரை புகழ்ந்து வந்திருக்கின்றன. எனினும் பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்துள்ளார்.இத்தகைய விமர்சனங்கள் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டச்சர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் அவரது உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டினையும், மதமாற்றத்தைக்குறிக்கோளாகக் கொண்ட அவரது யுத்திகளாகக் கருதி எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளாகும். பல மருத்துவப் பத்திரிகைகள், அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிய வண்ணமும் இருந்தன.

1979 ல், அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

மரணத்திற்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்ற பட்டம் சூட்டப்பட்டார்.

அன்னை தெரெசாவுக்கு பலதரப்பட்ட விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் மூலமாகவும், பல்வேறு சபைகளின் காவல் புனிதராக நியமிக்கப்பட்டதன் மூலமாகவும், விதவிதமான கட்டுமான அமைப்புகள் மற்றும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதின் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றின் ஆசிரியரான நவீன் சாவ்லா வால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

Stamp-honoring :


11/29/2010

அறிந்து கொள்வோம் - சபரிமலை

சபரிமலையின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்:

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான்  என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.



11/28/2010

சாதனை பெண்கள் - தமிழ் நாடு

 சாதனை பெண்கள் - தமிழ் நாடு

சங்க இலக்கியம்

சங்கத் தமிழ் பெண் புலவர்கள்
  • ஔவையார்
  • ஒக்கூர் மாசாத்தியார்
  • பொன்முடியார்
  • காக்கை பாடினியார் - பெண் புலவர் - காக்கை பாடினியம்
  • 33 சங்கப் பெண் புலவர்கள்

நாயன்மார்கள்

  • காரைக்கால் அம்மையார்
  • இசைஞானியார் நாயனார்
  • மங்கையர்க்கரசியார் நாயனார்

ஆழ்வார்

  • ஆண்டாள்

இந்திய விடுதலைப் போராட்டம்

  • வேலு நாச்சியார்
  • கேப்டன் லட்சுமி
  • வை. மு. கோதை நாயகி அம்மாள்
  • கி. சாவித்திரி அம்மாள்
  • கரினி
  • ச. அம்புஜம்மாள்
  • குமுதினி
  • தில்லையாடி வள்ளியம்மை
  • ருக்மணி லட்சுமிபதி

தமிழீழ விடுதலைப் போராட்டம்

  • மேஜர் சோதியா
  • மாலதி
  • தமிழ்க்கவி
  • அன்னை பூபதி

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம்

  • தில்லையாடி வள்ளியம்மை
  • அம்மா நாயுடு
  • சரோஜினி நாயுடு

கல்வி

  • அக்கா சுபலட்சுமி

மருத்துவம்

  • முத்து லட்சுமி ரெட்டி - முதல் இந்திய பெண் மருத்துவர்
  • சா. தருமாம்பாள்
  • வி. சாந்தா  - சிறந்த மருத்துவர், உலக சுகாதார அமைப்பு ஆலோசகர்

பொறியியல்

  • சிறீலட்சுமி பிரியா - முதல் தமிழ்ப் பெண் கப்பல் பொறியியலாளர்

இணையம்

  • மதி கந்தசாமி - தமிழ் வலைப்பதிவு முன்னோடி,
  • சந்திரவதனா செல்வகுமாரன் - இணைய எழுத்தாளர்

மனித உரிமைகள்

  • ராஜினி
  • நவநீதம் பிள்ளை

சமூக சேவை

  • தங்கம்மா அப்பாக்குட்டி
  • சவுத்திரம் இராமச்சந்திரன்

தமிழறிஞர்கள்

  • நீலாம்பிகை அம்மையார்
  • அசலாம்பிகை அம்மை

கவிதை

  • குட்டி ரேவதி
  • மாலதி மைத்திரி
  • உமா மகேஸ்வரி
  • சுகிர்த ராணி
  • சல்மா
  • இறம்பறை
  • வெண்ணிலா

இசை

  • பி. சுசீலா
  • மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
  • தமள் கிருட்ணசுவாமி பட்டம்மாள்
  • மேட்ராசு லலிதாங்கி வஸன்தகுமாரீ
  • கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
  • டி. கே. பட்டம்மாள்

ஆட்டம்

  • குமார் மாலா
  • ருக்மணிதேவி அருண்டேல்

இயங்குபடம்

  • வனிதா - ஆசுகர் விருது பெற்றவர்

விளையாட்டு

  • இளவழகி - கரம் உலக வெற்றிவீரர்
  • சாந்தி சுந்தராஜன் - ஆசிய விளையாட்டுப் போட்டி, 800 மீ ஓட்டம் வெள்ளி பதக்கம்
  • உத்ரா - சதுரங்கம்
  • சந்தியா - சிலம்பாட்டம்
  • ரேவதி (விளையாட்டு வீரர்)
  • யோகலட்சுமி - மலையேறுதல்

பேச்சாளர்கள்

  • பர்வின் சுல்தானா
  • வாசுகி கண்ணதாசன்

நகைச்சுவை

  • டி ஏ மதுரம்
  • டி பி முத்துலட்சுமி
  • மனோரமா
  • ஈ வி சரோஜா
  • சச்சு
  • காந்திமதி
  • ஊர்வசி
  • கோவை சரளா
  • கல்பனா
  • ஆர்த்தி

எதிர்ப்புப் போராட்டம்/சமூகப் போராளிகள்

  • மணலூர் மணியம்மை
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  • நீலாவதி இராம. சுப்பிரமணியம்
  • மணியம்மை
  • கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் - நில மீட்புப் போராளி
  • ரூத் மனோரமா - தாழ்த்தப்பட்ட மக்களுக்கான, பெண்களுக்கான சமூகப் போராளி

அரசிகள்

  • இராணி முத்திருவாய் நாச்சியார்
  • ஈழத்துப் பனங்காமத்து அரசி வன்னி நாச்சியார்
  • இராணி மங்கம்மாள்
  • பாண்டிய அரசி தேவி மீனாட்சி

இந்தியா

  • மரகதம் சந்திரசேகர்
  • கனிமொழி
  • ஜானகி இராமச்சந்திரன்
  • ஜெ. ஜெயலலிதா

பெண்மையை போற்றுவோம் - ஆங் சான் சுய் ( Aung San Suu Kyi )

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: ஜூன் 19, 1945 மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்.

இவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர். 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாகரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார். 

1992 இல் இந்திய அரசின் ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார். 1990இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொண்டது. ஆனாலும் இவர் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை.
1945 ஆனி 19 இல் பிறந்த ஆங்சான் சூகிக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆடி 19 இல் அவரது தந்தை ஜெனரல் ஆங் சான் (Aung San) படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 தை 04ம் தேதி பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையாகிறது. 

தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூச்சி 1972 தை 01இல் பிரித்தானியரான மைக்கேல் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 1988இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 புரட்டாதி 24இல் உருவாக்கப்பட்ட NDL (National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 தை 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூச்சி தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். 

அதைத் தொடர்ந்து 1989 ஆடி 20இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 82% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சி பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்சான் சூச்சி வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும் ஆங்சான் சூச்சி பெற்றுக்கொண்டார்.

உட‌ல் ந‌லம்

 
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது. 

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".

ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?

நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது

என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.

உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும்.

உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.

உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. 

இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்.

தமிழ் சொல் அறிவோம் - கலம்பகம்

VAO EXAM TIPS - TAMIL 

கலம்பகம்

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப் பிரபந்தவகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.
ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.

கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.

கலம்பக இலக்கியங்கள் சில

  • நந்திக் கலம்பகம்
  • காசிக் கலம்பகம்
  • மதுரைக் கலம்பகம்
  • வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்
  • திருக்கண்ணபுரக் கலம்பகம்
  • தில்லைக் கலம்பகம்
  • மறைசைக் கலம்பகம்
  • அருணைக் கலம்பகம்
  • கதிர்காமக் கலம்பகம்
  • கச்சிக் கலம்பகம்
  • வெங்கைக் கலம்பகம்
  • புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்
  • திருவாமாத்தூர்க் கலம்பகம்


இவரை தெரிந்துகொள்வோம் - சேர் பொன்னம்பலம் இராமநாதன் .

சேர் பொன்னம்பலம் இராமநாதன் (1851 - 1930)

 இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் உயர் கல்வியும், பின்னர் கொழும்பில் சட்டக் கல்வி பயின்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர், பின்னர் சட்டமா அதிபராகப் பதவிவகித்து ஓய்வு பெற்றார். 1879 இல் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 இல் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1921 இல் பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவினார். கொழும்பு பொன்னம்பலவாணேசர் கோயிலை 1912 இல் கட்டினார். 

வாழ்க்கை வரலாறு

பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.

அரசியல் சேவை

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.

சமூக சேவை

இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.

சமய சேவை

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.
1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.
யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

இவரது நூல்கள்

  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898)
  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902)
  • The Culture of the Soul Among Western Nationals (1907))
  • The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905)
  • On Faith or Love of God (1897)
  • பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914)
  • திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919)
  • ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம்.

11/27/2010

இன்று இதை தெரிந்து கொள்‌வோம்

உவமைத் தொகை 

உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக "பானைவாய்" என்பது "பானை", "வாய்" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே "பானை" "வாய்க்கு" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும்.

எடுத்துக்காட்டுகள்

  • "மதிமுகம்"
  • "மலரடி"
  • "துடியிடை"
  • "கமலக்கண்"
  • "கனிவாய்"
  • "தேன்மொழி"
  • "மான்விழி"
  • "வாள்மீசை"
  இன்று....... 


நவம்பர் 27: தமிழ் ஈழம் - மாவீரர் நாள்
  • 1895 - பாரிசில் அல்பிரட் நோபல்  நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
  • 1964 - ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
  • 2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.

 

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி MP3 வடிவி்ல்

VAO EXAM, SSLC TAMILNADU EXAM TIPS MP3 FORMAT

To Listion Click hear ....



http://www.4shared.com/audio/8rVZQ9lu/British_Govt_establish_in_indi.html

11/26/2010

இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை Mp3 வடிவில்

VAO EXAM, SSLC TAMILNADU EXAM TIPS MP3 FORMAT

To Listion Click hear ....





இதை Download  செய்ய ......

http://www.4shared.com/audio/5KSgfVbR/Arive_Eropeance_in_India.html

இன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய அறிவியல் கழகம்

இன்றைய பொன்மொழிகள்:
  • உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
  • பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.
  • நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
  • வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
  • ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
  • சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
  • உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
  • ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
  • புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.    
இன்று இதை தெரிந்து கொள்‌வோம்:

 இந்திய அறிவியல் கழகம்

இந்திய அறிவியல் நிறுவனம் இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நாட்டின் மிகத் தரம் வாய்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1909-ல் தொடங்கப்பட்டது. இது சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.

நிர்வாகம்

1909-ல் மோரிஸ் டிராவர்ஸ் என்பவர் இதன் முதல் இயக்குனர் ஆனார். முதல் இந்திய இயக்குனர் சர் சி. வி. இராமன் ஆவார். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் பத்மநாபன் பலராம்ஆவார்.

கல்விப் பிரிவுகள்

உயிரியல் பிரிவு

  • உயிர் வேதியியல்
  • சூழல் அறிவியல் மையம்
  • நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்
  • மூலக்கூற்று உயிர் இயற்பியல்
  • மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்.

வேதியியல் பிரிவு

  • கனிம மற்றும் இயல் வேதியியல்
  • பொருட்கள் ஆய்வு மையம்
  • என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்
  • கரிம வேதியியல்
  • திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்.

மின்னியல் பிரிவு

  • மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்
  • கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்
  • மின் தொடர்புப் பொறியியல்
  • மின் பொறியியல்

கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு

  • வானியல் மற்றும் வான் இயற்பியல்
  • சமகாலவியல் கல்வி மையம்
  • தாழ்வெப்பவியல் நுட்ப மையம்
  • உயராற்றல் இயற்பியல் மையம்
  • கருவியியல்
  • கணிதவியல்
  • இயற்பியல்.

இயங்கியல் பிரிவு

  • வான்வெளிப் பொறியியல்
  • வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்
  • விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்
  • புவி அறிவியல் மையம்
  • Center for Sustainable technology
  • வேதிப் பொறியியல்
  • குடிசார் பொறியியல்
  • பருவமாற்ற ஆய்வு மையம்
  • மேலாண்மைக் கல்வி மையம்
  • பொருட்கள் பொறியியல்
  • இயங்கியற் பொறியியல்.
இயக்குநர்கள்
  • மோரிஸ் டிராவர்ஸ், FRS, 1909–1914
  • சர் அல்பிரேட் கிப்ஸ் பௌர்னே , FRS, 1915–1921
  • சர் மார்ட்டின் அன்சுலொவ் போர்ஷ்டேர், FRS, 1922–1933
  • சர் சந்திரசேகர வேங்கடராமன் , FRS, 1933–1937
  • சர் ஜே. சி. கோஷ் , 1939–1948
  • எம். எஸ். தச்கேர் , 1949–1955
  • எஸ். பாகவந்தம் , 1957–1962
  • சத்தீஷ் தவன் , 1962–1981
  • டி. கே. பானர்ஜீ , 1971–1972
  • எஸ். ராமசேஷன், 1981–1984
  • சி. என். ஆர். ராவ், FRS, 1984–1994
  • ஜி. பத்மநாபன் , 1994–1998
  • கோவர்தன் மேத்தா , 1998–2005
  • பத்மநாபன் பலராம், 2005– இன்று வரை.
 இன்று....... 

நிகழ்வுகள்
  • 1778 - ஹவாயன் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.
  • 1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1922 - எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
  • 1941 - பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு சப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
  • 1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
  • 1949 - இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • 1950 - மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
  • 1957 - சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
  • 1965 - சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செய் மதியை விண்ணுக்கு அனுப்பியது.
  • 1983 - லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
  • 2001 - நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
  • 2002 - இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1936 - லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)
  • 1939 - அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
  • 1948 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
  • 1948 - வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்
  • 1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)
  • 1939 - டீனா டர்னர், அமெரிக்க ராக் அன் ரோல் இசைக்கலைஞர்.

இறப்புகள்

  • 1930 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1851)
  • 2006 - ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை.
இன்றைய சிரிப்பு



ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.

"அப்பா...நான் படிக்கப் போகலை,"  "ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"     "ஆ...!"



பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

 

11/25/2010

பொது அறிவு - கேள்வி பதில்

 பொது அறிவு - கேள்வி பதில்

1. இந்தியாவின் மிக நீளமான நதி எது ?
2. பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்
    மாநிலம் எது ?
3. நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன ?
4. எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது ?
5. மிக முக்கியமான பணப்பயிர் எது ?
6. இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?
7. லக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது ?
8. சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?
9.  எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது ?
10. உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ?
11. சப்ர்மதி ஆஸ்ரமம் எங்குள்ளது ?
12. புத்தகயா எங்குள்ளது ?
13. இந்தியா கேட் எங்குள்ளது ?
14. அரிக்கமேடு எந்த மாநிலத்தில் உள்ளது ?
15. இந்தியாவின் ஹாலிவுட் எது ?
16. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உருவானது ?
17. தேக்கடி வன விலங்குகள் சரணாலயம் எங்குள்ளது ?
18. சேர மன்னர்களைப் பற்றி கூறும் நூல் எது ?
19. மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?
20. நற்றினையில் எத்தனை பாக்கள் உள்ளன ?


 பதில்கள்:

11.குஜராத் மாநிலத்தில் உள்ளது, 12.பீகார் மாநிலம், 13.டெல்லியில்
14.பாண்டிச்சேரி, 15.மும்பை,16.பீகார்,17.கேரள மாநிலத்தில்,
18.பதிற்றுப்பத்து,19.தொல்காப்பியம்,20.400 பாக்கள்.

அகதிகள்


அகதி என்பதன் தூய தமிழ்ப்பதம் ஏதிலியர் என்பதாகும்.

அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது.


அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.

இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிடுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12,019,700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34,000,000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது.


அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் வரையறுத்துள்ளபடி, அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள், அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல், குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல், மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும். 2005 ஆம் ஆண்டு நிலையின் படி மிக அதிகமான அகதிகள், பாலஸ்தீனப் பகுதிகள், ஆப்கனிஸ்தான், ஈராக், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் ஆகும்.

மகுடம் சூடிய பெண்கள்

நோபல் பரிசு பெற்ற பெண்களின் பட்டியல்

வேதியியல்

இயற்பியல்

மருத்துவம் (Physiology)

இலக்கியம்

அமைதி

பொருளாதாரம்